News April 7, 2025
1,500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

காஞ்சிபுரம், தயாா்குளம் எம்.ஜி.ஆா். நகா் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக நேற்று (ஏப்ரல் 6) போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்படி, மாவட்ட வழங்கல், நுகர்வோர் குழுவினர் வீட்டில் சோதனை நடத்தினர். அதில், உரிய ஆவணங்கள் இன்றி 30 மூட்டைகளில் 1,500 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
Similar News
News December 1, 2025
JUST IN: காஞ்சிபுரம்: நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

‘டிட்வா’ புயல் காரணமாக நாளை (டிச.2) காலை 8 மணி வரை காஞ்சிபுரத்தில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், காஞ்சிபுரத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் உத்தரவிட்டுள்ளார். ஷேர் பண்ணுங்க!
News December 1, 2025
FLASH: ‘டிட்வா’ புயல்; காஞ்சிக்கு இன்று ஆரஞ்சு அலெர்ட்!

‘டிட்வா’ புயல் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த இரு நாட்களாக மழை பெய்து வந்தது. டிட்வா புயல் வலுவிழந்து, மணிக்கு 3 கி.மீ வேகத்தில் கரையை நோக்கி நகர்ந்து வருகிறது. இதன் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு இன்று ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. எனவே, மக்கள் தேவையின்றி வெளியே செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. மற்றவர்களுக்கும் ஷேர் செய்து அலெர்ட்டாக இருக்க சொல்லுங்க.
News December 1, 2025
காஞ்சிபுரம்: 10th PASS.. AIIMS-ல் வேலை ரெடி.! APPLY NOW

காஞ்சிபுரம் மக்களே, எய்ம்ஸ் (AIIMS) மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் பல்வேறு பணிகளுக்கு 1383 காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 18-40 வயதிற்கு உட்பட்ட 10, 12, டிப்ளமோ, டிகிரி, B.E., முடித்தவர்கள் டிச. 2-க்குள் <


