News May 9, 2024
விரட்டி விரட்டி கடித்த நாய்கள், 15 பேர் காயம்

பொன்னமராவதி அருகே இன்று ஒரே நாளில் 15 பேரை நாய் கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சொக்கநாதபட்டியில், தெரு நாய்கள் அப்பகுதியில் சென்றவர்களை விரட்டி கடித்ததில் பலர் காயமடைந்தனர். சென்னையில் சிறுமி ஒருவரை வளர்ப்பு நாய் கடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இதுபோன்று நாய்களால் பொதுமக்கள் பாதிக்கப்படுவது தொடர் கதையாகி வருகிறது.
Similar News
News February 15, 2026
கடலூர்: ரூ.2.10 லட்சம் மானியம்!

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், செயல்படுத்தப்படும் இலவச மாட்டுக் கொட்டகை அமைக்கும் திட்டத்தில் மாட்டு கொட்டகை அமைக்க மானியம் வழங்கப்படுகிறது. அதில் 4 மாடுகள் வரை வைத்திருந்தால் ரூ.79,000-மும், 5 முதல் 10 மாடுகள் வரை இருந்தால் ரூ.2.10 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இதில் பயன்பெற விரும்புவோர் உங்கள் பகுதி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை அணுகலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க.
News February 15, 2026
இன்று சிவராத்திரி.. இரவில் இதை செய்யாதீங்க

*இரவு மட்டுமல்ல, நாளை மாலை 6 மணி வரை தூங்கக்கூடாது.
*உணவில் வெங்காயம் & பூண்டு சேர்க்கக் கூடாது.
*பிறரிடம் கடுமையாக பேசக்கூடாது.
*விழித்திருக்க வேண்டும் என்பதற்காக டிவி பார்க்கவோ, போன் யூஸ் பண்ணவோ கூடாது.
*பிரம்மச்சரியத்தை கடைப்பிடிக்க வேண்டும்.
*கருப்பு நிற ஆடைகளை தவிருங்கள்.
*எந்தவொரு தீய செயலும் செய்யக்கூடாது. *அசைவ உணவுகள், மது, சிகரெட்டை தொடக்கூடாது. SHARE
News February 15, 2026
குறைபாடுடைய குழந்தையை கொன்ற பெற்றோருக்கு ஆயுள்!

ஊனத்துடன் பிறந்த குழந்தையை பராமரிப்பது பெற்றோரின் கடமை என மதுரை HC கூறியுள்ளது. இதுகுறித்த வழக்கில், குழந்தை வளர்ப்பில் பெற்றோர் சந்தித்த சிரமங்களை கருத்தில் கொண்டாலும், கொலை செய்வதற்கு சட்டம் அனுமதித்தால் அத்தகைய குழந்தைகள் உலகில் உயிர்வாழ முடியாது என கோர்ட் தெரிவித்துள்ளது. மேலும், விஷம் கொடுத்து குழந்தையை கொன்ற பெற்றோருக்கு கீழ்நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனை உத்தரவையும் கோர்ட் உறுதி செய்தது.


