News August 9, 2024

அரசின் அலட்சியமே 15 பேர் உயிரிழக்கக் காரணம்: ராமதாஸ்

image

தமிழக அரசின் அலட்சியத்தால் ஆன்லைன் சூதாட்டத்தில் இதுவரை 15 பேர் தற்கொலை செய்துகொண்டதாக ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார். ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிரான சட்டத்தை, உயர்நீதிமன்றம் ரத்து செய்த நிலையில், அதை எதிர்த்து, ஏன் தமிழக அரசு மேல்முறையீடு செய்யவில்லை எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். இனியும், ஏழை மக்களின் உயிரோடு அரசு இனியும் விளையாடக்கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளார்.

Similar News

News December 30, 2025

புதுச்சேரி: தனது வருகையை பதிவு செய்த துணை ஜனாதிபதி

image

புதுச்சேரியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள துணை ஜனாதிபதி சிபி ராதாகிருஷ்ணன் இன்று வருகை புரிந்தார். புதுச்சேரி ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள பாரதியார் நினைவு அருங்காட்சியகத்துக்கு வந்த துணை ஜனாதிபதி, அங்கிருந்த பாரதியாரின் திருவுருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார். பின்பு அங்கு உள்ள வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டு தனது வருகையை பதிவு செய்தார்.

News December 30, 2025

இதுவரை 7.28 லட்சம் மட்டுமே விண்ணப்பம்: ECI

image

தமிழகத்தில் SIR பணிகளின் மூலம் சுமார் 97 லட்சம் வாக்காளர்களை ECI நீக்கி இருந்தது. ஆனால், வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க TN-ல் இதுவரை சுமார் 7.28 லட்சம் பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளதாக ECI தெரிவித்துள்ளது. பட்டியலில் பெயர் இடம் பெறாதவர்கள், பெயர் சேர்ப்புக்கு படிவம் 6-யும், முகவரி மாற்றத்துக்கு படிவம் 8-யும் பூர்த்தி செய்து தேர்தல் அலுவலரிடம் ஜன. 18-ம் தேதிக்குள் வழங்கலாம்.

News December 30, 2025

மிரட்டல் அடியால் 160 ரன்கள் குவித்த துருவ் ஜுரேல்

image

விஜய் ஹசாரே கோப்பையில் பரோடா அணியை 54 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி உ.பி., வெற்றி பெற்றது. முதலில் விளையாடிய உ.பி., அணி 369 ரன்கள் குவிக்க துருவ் ஜுரேல் அதிரடி சதமே காரணம். பரோடா பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்த அவர், 101 பந்துகளில் 160 ரன்களை அடித்து பிரமிக்க வைத்தார். சிறப்பான பார்மில் உள்ள அவர் இந்த தொடரில் அடிக்கும் 3-வது 50+ ஸ்கோர் இதுவாகும்.

error: Content is protected !!