News August 9, 2024
அரசின் அலட்சியமே 15 பேர் உயிரிழக்கக் காரணம்: ராமதாஸ்

தமிழக அரசின் அலட்சியத்தால் ஆன்லைன் சூதாட்டத்தில் இதுவரை 15 பேர் தற்கொலை செய்துகொண்டதாக ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார். ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிரான சட்டத்தை, உயர்நீதிமன்றம் ரத்து செய்த நிலையில், அதை எதிர்த்து, ஏன் தமிழக அரசு மேல்முறையீடு செய்யவில்லை எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். இனியும், ஏழை மக்களின் உயிரோடு அரசு இனியும் விளையாடக்கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளார்.
Similar News
News November 18, 2025
BREAKING: நாளை மறுநாள் அனைத்து பள்ளிகளுக்கும்…

அரசு தேர்வுகள் இயக்ககம் அனைத்து பள்ளிகளுக்கும் முக்கிய அறிவிப்பை வழங்கியுள்ளது. அதன்படி, நவ.10-ல் திறனறி தேர்வு எழுதிய மாணவர்கள் தங்கள் பெயர், இனிஷியல், படிக்கும் பள்ளி உள்ளிட்ட விவரங்களில் திருத்தம் இருப்பின், dgedsection@gmail.com இமெயில் மூலம் நவ.20-க்குள் தெரிவிக்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. இதில், தேர்வாகும் மாணவர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு அரசு மாதந்தோறும் தலா ₹1,500 வழங்க உள்ளது. SHARE IT.
News November 18, 2025
அட்ஜஸ்ட்மெண்ட் குற்றச்சாட்டை மறுத்த தனுஷ் தரப்பு

தனுஷுடன் நடிக்க அட்ஜஸ்ட்மெண்ட் செய்யுமாறு அழுத்தம் தரப்பட்டதாக <<18320110>>நடிகை மான்யா<<>> வைத்த குற்றச்சாட்டை Wunderbar பிலிம்ஸ் மறுத்துள்ளது. இந்த விஷயத்தில் தங்களது பெயரை யாரோ தவறாக பயன்படுத்துவதாக Wunderbar பிலிம்ஸ் மற்றும் தனுஷின் மேலாளர் ஸ்ரேயாஸ் விளக்கமளித்துள்ளார். அந்நிறுவனத்தின் பெயரில் வரும் Casting Call அழைப்புகள் போலியானது என்றும், 7598756841 மொபைல் எண் தன்னுடையது அல்ல எனவும் அவர் கூறியுள்ளார்.
News November 18, 2025
உங்கள் போன், உங்களை ஒட்டுக் கேட்பது தெரியுமா?

நீங்கள் எதைப் பற்றியாவது பேசியபின், உங்கள் சோஷியல் மீடியா, இணைய தேடல்களில் அது தொடர்பான விளம்பரங்கள் வருவதை கவனித்திருக்கிறீர்களா? இதற்கு காரணம், நீங்கள் பேசுவதை போன் ஒட்டுக் கேட்பது தான் என்கின்றனர் டெக் நிபுணர்கள். உங்கள் பேச்சை கேட்கும் ஆப்கள், அதிலுள்ள Keywords-ஐ உள்வாங்கி, அதற்கேற்ப விளம்பரங்களை வழங்குகிறதாம். இதை தவிர்க்க, போனில் உள்ள ஆப்களில் மைக் பர்மிஷனை Turn off செய்ய வேண்டும்.


