News August 9, 2024

அரசின் அலட்சியமே 15 பேர் உயிரிழக்கக் காரணம்: ராமதாஸ்

image

தமிழக அரசின் அலட்சியத்தால் ஆன்லைன் சூதாட்டத்தில் இதுவரை 15 பேர் தற்கொலை செய்துகொண்டதாக ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார். ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிரான சட்டத்தை, உயர்நீதிமன்றம் ரத்து செய்த நிலையில், அதை எதிர்த்து, ஏன் தமிழக அரசு மேல்முறையீடு செய்யவில்லை எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். இனியும், ஏழை மக்களின் உயிரோடு அரசு இனியும் விளையாடக்கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளார்.

Similar News

News December 6, 2025

ரயிலில் உள்ள 5 இலக்க எண் எதை குறிக்கிறது தெரியுமா?

image

ரயில் பெட்டியின் 5 எண்களில், முதல் 2 எண்கள் ரயில் உருவான ஆண்டை குறிக்கிறது. கடைசி 3 எண்கள், கோச்சை குறிக்கிறது. 001-200: AC கோச், 201-400: 2nd Sleeper, 401-600: ஜெனரல், 601-700: Second Sitting, 701-800: லக்கேஜ், 801+: பேன்ட்ரி, ஜெனரேட்டர் கோச் ஆகும். உதாரணத்திற்கு, ‘08453’ என்றால் 2008-ல் உருவான ரயில், ஜெனரல் பெட்டி என அர்த்தம். மேலே உள்ள Photo எதை குறிக்கிறது என கமெண்ட்ல சொல்லுங்க. SHARE.

News December 6, 2025

விஜய்யுடன் கூட்டணி பேச்சு.. முதல் கட்சியாக அறிவிப்பு

image

லாட்டரி மார்டினின் மகன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின், புதுச்சேரியில் டிச.14-ல் புதிய கட்சியை தொடங்கவுள்ளார். இந்நிலையில், விஜய்யுடன் கூட்டணி சேர தாங்கள் ஒரு முன்னெடுப்பை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதற்கு தவெக விரும்பினால் கூட்டணி அமையும் என்றும் அவர் கூறியுள்ளார். ஏற்கெனவே, புதுச்சேரியில் உள்ள முக்கிய அரசியல் புள்ளிகளை சார்லஸ் இழுக்க முயற்சித்தபோது, அவர்களில் சிலர் தவெகவில் இணைந்ததாக கூறப்பட்டது.

News December 6, 2025

10th போதும்.. ₹21,000 சம்பளத்தில் மத்திய அரசில் வேலை

image

BSF, CISF, CRPF, ITBP, SSB, SSF உள்ளிட்ட படைப் பிரிவுகளில் காலியாகவுள்ள 25,487 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. வயது வரம்பு: 18 – 23. தமிழ் உள்பட 13 பிராந்திய மொழிகளில் தேர்வு நடத்தப்பட்டு, உடற்தகுதி, மருத்துவ பரிசோதனை உள்ளிட்டவை மூலம் தேர்வு செய்யப்படுவர். சம்பளம்: 21,700 – ₹69,100. விண்ணப்பிக்க விரும்புவோர், இங்கே <>கிளிக்<<>> செய்து டிச.31-க்குள் விண்ணப்பியுங்கள். SHARE IT.

error: Content is protected !!