News August 9, 2024
அரசின் அலட்சியமே 15 பேர் உயிரிழக்கக் காரணம்: ராமதாஸ்

தமிழக அரசின் அலட்சியத்தால் ஆன்லைன் சூதாட்டத்தில் இதுவரை 15 பேர் தற்கொலை செய்துகொண்டதாக ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார். ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிரான சட்டத்தை, உயர்நீதிமன்றம் ரத்து செய்த நிலையில், அதை எதிர்த்து, ஏன் தமிழக அரசு மேல்முறையீடு செய்யவில்லை எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். இனியும், ஏழை மக்களின் உயிரோடு அரசு இனியும் விளையாடக்கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளார்.
Similar News
News November 24, 2025
நடிகர் ரஜினி கண்ணீர் அஞ்சலி

நடிகர் தர்மேந்திரா மறைவுக்கு ரஜினி இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், ‘பிரியாவிடை நண்பரே, உங்களின் பொன்னான மனதையும் நாம் பகிர்ந்த தருணங்களையும் என்றும் நினைவில் வைத்திருப்பேன்’ என்று குறிப்பிட்டுள்ளார். ‘RIP தரம் ஜி’ என உருக்கமாக பதிவிட்ட அவர், தர்மேந்திராவின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். சிம்ரன் உள்ளிட்ட பல பிரபலங்களும் தர்மேந்திரா மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். RIP
News November 24, 2025
சிறுவர்கள் SM பயன்படுத்த தடை: மலேசியா முடிவு

<<18255562>>ஆஸி.,யில்<<>> 16 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், சமூக வலைதளங்கள் பயன்படுத்த விதிக்கப்பட்டுள்ள தடை டிச.10 முதல் அமலுக்கு வருகிறது. இந்நிலையில், இதேபோன்ற தடையை 2026 முதல் கொண்டுவர மலேசிய அரசு முடிவு செய்துள்ளது. இணைய அச்சுறுத்தல்கள், மோசடிகள், ஆன்லைன் ஆபத்துகளிலிருந்து சிறுவர்களை பாதுகாப்பதே இதன் முக்கிய குறிக்கோள் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதேபோன்ற தடையை இந்தியாவில் கொண்டு வருவது பற்றி உங்கள் கருத்து?
News November 24, 2025
கலை உலகிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு: ராகுல்

<<18375107>>தர்மேந்திராவின் மறைவு<<>> இந்திய கலை உலகிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். தனது இரங்கல் பதிவில், ஏறக்குறைய ஏழு தசாப்தங்களாக சினிமாவுக்கு தர்மேந்திரா ஆற்றிய இணையற்ற பங்களிப்பு எப்போதும் மரியாதையுடனும், அன்புடனும் நினைவுகூரப்படும் என்று ராகுல் கூறியுள்ளார். இதனிடையே, மம்தா பானர்ஜி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


