News August 9, 2024

அரசின் அலட்சியமே 15 பேர் உயிரிழக்கக் காரணம்: ராமதாஸ்

image

தமிழக அரசின் அலட்சியத்தால் ஆன்லைன் சூதாட்டத்தில் இதுவரை 15 பேர் தற்கொலை செய்துகொண்டதாக ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார். ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிரான சட்டத்தை, உயர்நீதிமன்றம் ரத்து செய்த நிலையில், அதை எதிர்த்து, ஏன் தமிழக அரசு மேல்முறையீடு செய்யவில்லை எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். இனியும், ஏழை மக்களின் உயிரோடு அரசு இனியும் விளையாடக்கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளார்.

Similar News

News December 4, 2025

‘டியூட்’ சர்ச்சை.. இழப்பீடு பெற்ற இளையராஜா

image

‘டியூட்’ படத்தில் கருத்த மச்சான், நூறு வருஷம் உள்ளிட்ட பாடல்களை, தன்னுடைய அனுமதியின்றி பயன்படுத்தியதாக மெட்ராஸ் HC-ல் இளையராஜா வழக்கு தொடுத்திருந்தார். இந்நிலையில், இளையராஜாவுக்கு உரிய இழப்பீடு வழங்கியதாகவும், படத்தின் டைட்டில் கார்டில் நன்றி தெரிவிக்கப்படும் என்றும் தயாரிப்பு நிறுவனம் பதிலளித்துள்ளது. இருதரப்பும் சமரசத்திற்கு ஒப்புக்கொண்டதால், டியூட்-ல் மீண்டும் அப்பாடல்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

News December 4, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: பொச்சாவாமை
▶குறள் எண்: 539
▶குறள்:
இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக தாந்தம்
மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து.
▶பொருள்: மமதையால் பூரித்துப்போய்க் கடமைகளை மறந்திருப்பவர்கள், அப்படி மறந்துபோய் அழிந்து போனவர்களை நினைத்துப் பார்த்துத் திருந்திக் கொள்ள வேண்டும்.

News December 4, 2025

தோல்விக்கான காரணங்களை அடுக்கிய கே.எல்.ராகுல்

image

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது ODI-ல் தோற்றதற்கு டாஸும் ஒரு முக்கிய காரணம் என்று கேப்டன் கே.எல்.ராகுல் கூறியுள்ளார். ஏனெனில், 2-வது இன்னிங்ஸில் பனிப்பொழிவின் காரணமாக பந்துவீசுவது மிகவும் கடினமாக இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார். பந்துவீச்சாளர்கள் இன்னும் சிறப்பாக செயல்பட்டிருக்க வேண்டும் என்றும், பேட்டிங்கின் போது 20-25 ரன்கள் கூடுதலாக அடித்திருக்கலாம் எனவும் கே.எல்.ராகுல் பேசியுள்ளார்.

error: Content is protected !!