News August 9, 2024
அரசின் அலட்சியமே 15 பேர் உயிரிழக்கக் காரணம்: ராமதாஸ்

தமிழக அரசின் அலட்சியத்தால் ஆன்லைன் சூதாட்டத்தில் இதுவரை 15 பேர் தற்கொலை செய்துகொண்டதாக ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார். ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிரான சட்டத்தை, உயர்நீதிமன்றம் ரத்து செய்த நிலையில், அதை எதிர்த்து, ஏன் தமிழக அரசு மேல்முறையீடு செய்யவில்லை எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். இனியும், ஏழை மக்களின் உயிரோடு அரசு இனியும் விளையாடக்கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளார்.
Similar News
News December 6, 2025
மயிலாடுதுறை: போனில் இருக்க வேண்டிய எண்கள்!

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க!
News December 6, 2025
தேர்தலில் அண்ணாமலை போட்டியிடுவது டவுட்டா?

பாஜகவில் நயினார், அண்ணாமலைக்கு இடையேயான மோதல் கொளுந்துவிட்டு எரிவதாக பேசப்படுகிறது. அண்ணாமலை தரப்பை பேஸ்மெண்ட்டோடு தகர்க்கும் பிளானில் இருக்கும் நயினார், தொடர்ந்து அவரது ஆதரவாளர்களை கட்சியிலிருந்து நீக்கிவருகிறாராம். அத்துடன் வரும் தேர்தலில் அண்ணாமலைக்கு சீட் கிடைக்கக்கூடாது என நயினார் தீர்க்கமாக இருப்பதாகவும், இதுகுறித்து டெல்லி பாஜகவிடம் அவர் பேசிவருவதாகவும் விவரம் அறிந்தவர்கள் சொல்கின்றனர்.
News December 6, 2025
BREAKING: தங்கம் விலை சரசரவென மாறியது

கடந்த 2 நாள்களாக ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்த நிலையில், இன்று அதிகரித்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹320 உயர்ந்து ₹96,320-க்கும், கிராமுக்கு ₹40 உயர்ந்து ₹12,040-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.


