News August 9, 2024
அரசின் அலட்சியமே 15 பேர் உயிரிழக்கக் காரணம்: ராமதாஸ்

தமிழக அரசின் அலட்சியத்தால் ஆன்லைன் சூதாட்டத்தில் இதுவரை 15 பேர் தற்கொலை செய்துகொண்டதாக ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார். ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிரான சட்டத்தை, உயர்நீதிமன்றம் ரத்து செய்த நிலையில், அதை எதிர்த்து, ஏன் தமிழக அரசு மேல்முறையீடு செய்யவில்லை எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். இனியும், ஏழை மக்களின் உயிரோடு அரசு இனியும் விளையாடக்கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளார்.
Similar News
News October 14, 2025
விஜய்யின் அடுத்த திட்டம் என்ன? அருண்ராஜ் விளக்கம்

SC தீர்ப்புக்கு பிறகு தவெக நிர்வாகிகள் நேற்று இரவு விஜய்யை சந்தித்து ஆலோசனை நடத்தினர். பின்னர், பேசிய அருண்ராஜ், SC தீர்ப்பு நம்பிக்கை அளிக்கும் வகையில் உள்ளதால், உடனடியாக பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க விஜய் விரும்புவதாகவும், அதற்கான ஏற்பாடுகளை செய்ய அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், N.ஆனந்த் உள்ளிட்டோர் இன்று(அக்.14) விஜய்யை சந்தித்து அடுத்தக்கட்ட பணிகள் குறித்து ஆலோசிக்க உள்ளனர்.
News October 14, 2025
விஜய்யை பார்த்ததும் செந்தில் பாலாஜியை அட்டாக் செய்த CTR

விஜய் உடனான சந்திப்புக்கு பின், CTR நிர்மல்குமாரிடம் கரூரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தெரியாமலேயே SC-யில் மனு தாக்கல் செய்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, பிறழ்சாட்சியாக மாற்றுவதில் மன்னராக இருப்பவர் செந்தில் பாலாஜி. அவரின் பழைய வழக்கில் 50 பேரையே பிறழ்சாட்சியாக சொல்ல வைத்த செந்தில் பாலாஜிக்கு, இங்குள்ள 4 பேரை மிரட்டி மாத்தி பேச வைப்பது பெரிய விஷயம் அல்ல என்றார்.
News October 14, 2025
வெறும் வயிற்றில் தண்ணீர் குடிக்கிறீங்களா?

காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது பலரின் வழக்கம். இதனால், உடலின் Metabolism வழக்கத்தை விட 30% அதிகரிக்கும் என டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். குடல் இயக்கம் ஆரோக்கியமாகி, உடலில் நீர்ச்சத்து குறையாமல் நீடிக்கிறது. மேலும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, உடல் எடை குறையும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறுகின்றனர். அதே நேரத்தில், ஆரோக்கியமாக இருக்க ஒரு நாளைக்கு 4 லிட்டர் தண்ணீர் குடியுங்கள்.