News August 9, 2024
அரசின் அலட்சியமே 15 பேர் உயிரிழக்கக் காரணம்: ராமதாஸ்

தமிழக அரசின் அலட்சியத்தால் ஆன்லைன் சூதாட்டத்தில் இதுவரை 15 பேர் தற்கொலை செய்துகொண்டதாக ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார். ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிரான சட்டத்தை, உயர்நீதிமன்றம் ரத்து செய்த நிலையில், அதை எதிர்த்து, ஏன் தமிழக அரசு மேல்முறையீடு செய்யவில்லை எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். இனியும், ஏழை மக்களின் உயிரோடு அரசு இனியும் விளையாடக்கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளார்.
Similar News
News February 16, 2026
குமரி: மகளிருக்கு ரூ.15 லட்சம் கடன் உதவி

தமிழ்நாடு பொருளாதார மேம்பாட்டு கழகம் சார்பில் சுய உதவி குழுக்களுக்கு ரூ.15 லட்சம் கடன் உதவி வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக ஒரு குழு தொடங்கி 6 மாதங்கள் ஆகியிருக்க வேண்டும். பிசி, எம்பிசி, சீர்மரபினர்கள் இந்த கடனை பெற முடியும். மேலும் இந்த கடனை பெற கூட்டுறவு மண்டல இணை பதிவாளர் அலுவலகம் கூட்டுறவு வங்கிகள், கடன் சங்கங்கள் <
News February 16, 2026
பிப்.20-ல் கில்லி படம் மீண்டும் ரீ-ரிலீஸ்

விஜய்யின் கரியரில் பிளாக்பஸ்டர் படங்களில் ஒன்றான கில்லி 2-வது முறையாக ரீ-ரிலீசாகிறது. 2024 ஏப்ரலில் ரீ-ரிலீசான கில்லி ₹20 கோடிக்கு மேல் வசூலித்திருந்தது. இந்நிலையில், தியேட்டர் உரிமையாளர்களின் கோரிக்கையை ஏற்று வரும் 20-ம் தேதி கில்லி ரீ-ரிலீஸ் செய்யப்படுவதாக படத்தின் விநியோகஸ்தர் அறிவித்துள்ளார். இதனால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். யாருக்கெல்லாம் கில்லி பிடிக்கும்? கமெண்ட் பண்ணுங்க
News February 16, 2026
கர்ப்பிணிகள் கவனத்திற்கு.. நாளை சூரிய கிரகணம்

சூரிய கிரகணத்தின்போது கர்ப்பிணிகள் எச்சரிக்கப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. கிரகண நேரத்தில் அவர்கள் வெளியே செல்லக்கூடாது, சென்றால் பாதிப்பு ஏற்படும் என்று கூறுவார்கள். ஆனால், பாதிப்பு ஏற்படும் என்பதற்கு இதுவரை எந்த அறிவியல் சான்றும் இல்லை. இருப்பினும், வெப்ப அலைகள் மற்றும் சுற்றுச்சூழல்களில் மாற்றம் இருக்கலாம் என்பதால் வெளியே செல்வதை தவிர்ப்பது நல்லது என்று நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.


