News August 9, 2024
அரசின் அலட்சியமே 15 பேர் உயிரிழக்கக் காரணம்: ராமதாஸ்

தமிழக அரசின் அலட்சியத்தால் ஆன்லைன் சூதாட்டத்தில் இதுவரை 15 பேர் தற்கொலை செய்துகொண்டதாக ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார். ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிரான சட்டத்தை, உயர்நீதிமன்றம் ரத்து செய்த நிலையில், அதை எதிர்த்து, ஏன் தமிழக அரசு மேல்முறையீடு செய்யவில்லை எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். இனியும், ஏழை மக்களின் உயிரோடு அரசு இனியும் விளையாடக்கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளார்.
Similar News
News November 14, 2025
பிஹார் வெற்றி தமிழகத்திலும் தொடரும்: நயினார்

பிஹார் தேர்தல் வெற்றி தமிழகத்திலும் தொடரும் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். மேலும் பாஜக வெற்றிக்கு ECI உதவியதாக காங்கிரஸ் வைக்கும் குற்றச்சாட்டுக்கு அவர் பதிலடி கொடுத்துள்ளார். தேர்தலில் வெற்றிபெற்றால் அமைதியாக இருக்கும் காங்., தோல்வியடைந்தால் மட்டும் ECI-யை குற்றம்சாட்டுவதாகவும் விமர்சித்துள்ளார்.
News November 14, 2025
‘கும்கி 2’ படத்தை வெளியிட HC அனுமதி

பிரபு சாலமன் வாங்கிய கடனுக்காக ‘கும்கி 2’ படத்தை வெளியிட சென்னை HC <<18267148>>இடைக்கால தடை<<>> விதித்திருந்தது. இந்நிலையில் பிரபு சாலமன் படத்தின் இயக்குனர் மட்டுமே, வாங்கிய கடனுக்கு நாங்கள் பொறுப்பேற்க முடியாது என தயாரிப்பாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட HC, ‘கும்கி 2’ படத்தை வெளியிட அனுமதி கொடுத்தது. அதேநேரம் ₹1 கோடியை கோர்ட்டில் செலுத்த பிரபு சாலமனுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
News November 14, 2025
20 ஆண்டுகளில் RJD சந்தித்த பெருந்தோல்வி

பிஹாரில் மிக சக்திவாய்ந்த அரசியல் கட்சியான லாலுவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் (RJD), 2005-க்கு பிறகு மிகப்பெரிய தோல்வியை சந்தித்துள்ளது. 2005-ல் ராப்ரி தேவி முதல்வராக இருந்தபோது ஏற்பட்ட எதிர்ப்பு அலையில் நிதிஷ்-பாஜக கூட்டணி வென்றது. 20 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் நிதிஷ் – பாஜக கூட்டணி தேஜஸ்வி யாதவ் தலைமையிலான RJD-யை வீழ்த்தி ஆட்சியை தக்க வைத்துள்ளது. RJD தற்போது 24 இடங்களில் மட்டுமே முன்னணியில் உள்ளது.


