News August 9, 2024

அரசின் அலட்சியமே 15 பேர் உயிரிழக்கக் காரணம்: ராமதாஸ்

image

தமிழக அரசின் அலட்சியத்தால் ஆன்லைன் சூதாட்டத்தில் இதுவரை 15 பேர் தற்கொலை செய்துகொண்டதாக ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார். ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிரான சட்டத்தை, உயர்நீதிமன்றம் ரத்து செய்த நிலையில், அதை எதிர்த்து, ஏன் தமிழக அரசு மேல்முறையீடு செய்யவில்லை எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். இனியும், ஏழை மக்களின் உயிரோடு அரசு இனியும் விளையாடக்கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளார்.

Similar News

News December 26, 2025

மைசூரில் சிலிண்டர் வெடித்து பலூன் வியாபாரி பலி

image

கர்நாடகாவின் மைசூரின் கண்காட்சி ஆணையம் அருகே கேஸ் சிலிண்டர் வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பலூன்களை காற்று நிரப்ப பயன்படுத்தப்படும் கேஸ் சிலிண்டர் வெடித்ததாகவும், இதில் பலூன் வியாபாரி இறந்ததாகவும் போலீஸார் தெரிவிக்கின்றனர். மேலும் 4 பேர் கவலைக்கிடமான நிலையில் ஹாஸ்பிடலில் சிகிச்சையில் உள்ளதாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

News December 26, 2025

யூடியூபர்ஸ் இருக்காங்களே.. சண்முக பாண்டியன்

image

விஜய் அரசியலுக்கு சென்றுவிட்டார், அஜித் ரேஸிங்கில் பிஸியாக உள்ளார், இதனால் தமிழ் சினிமா சற்று நெருடலை சந்திக்கும் என பலரும் கூறி வருகின்றனர். இந்நிலையில், இதுகுறித்து பேசிய சண்முக பாண்டியன், தற்போது யூடியூபர்ஸ், இன்ஸ்டா, டிக்டாக் பிரபலங்கள் நடிக்க வந்துவிட்டனர் என தெரிவித்தார். MGR தொடங்கி விஜய் வரை ஒவ்வொரு முறையும் தமிழ் சினிமா வளர்ந்து கொண்டே தான் இருக்கிறது என்றும் அவர் கூறினார்.

News December 26, 2025

அம்பேத்கரின் மரபை பாஜக பாதுகாக்கிறது: PM மோடி

image

சுதந்திரத்திற்கு பின் அனைத்து நற்பெயர்களும் ஒரு குறிப்பிட்ட குடும்பத்தை சுற்றியே இருந்ததாக, காங்.,ஐ PM மோடி மறைமுகமாக சாடியுள்ளார். லக்னோவில் பேசிய அவர், ஒரு குடும்பத்திற்கு மட்டுமே கட்டுப்பட்ட பழைய அமைப்பிலிருந்து இந்தியாவை பாஜக மீட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அம்பேத்கரின் மரபை அழிப்பதில் காங்., சமாஜ்வாதி கட்சிகள் பாவம் செய்ததாக கூறிய மோடி, அம்பேத்கரின் மரபை பாஜக பாதுகாத்து வருகிறது என்றார்.

error: Content is protected !!