News May 23, 2024
கனமழைக்கு 7 நாளில் 15 பேர் பலி

தமிழ்நாட்டில் கனமழை காரணமாக கடந்த 7 நாள்களில் 15 பேர் உயிரிழந்துள்ளனர் என பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 13 கால்நடைகள் உயிரிழந்துள்ளதாகவும், நெல், சோளம், பருப்பு, எள்ளு, கடலை உள்பட 4,385.40 ஹெக்டேர் பரப்பளவிலான விளைநிலங்கள் மழைநீரில் மூழ்கி சேதமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மழையால் சேதமடைந்த வீடுகள், பயிர்களுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க திட்டமிட்டுள்ளது.
Similar News
News August 18, 2025
துரைமுருகனிடம் நலம் விசாரித்த CM ஸ்டாலின்

உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள அமைச்சர் துரைமுருகனை CM ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார். அப்போது அவருடன் எ.வ.வேலு உடனிருந்தார். கையில் கட்டுடன் துரைமுருகன் இருக்கும் போட்டோ வெளியாகியுள்ளது. முழுமையான காரணம் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. முன்னதாக, கடந்த ஜூனில் காய்ச்சல் காரணமாக சென்னை குரோம்பேட்டை தனியார் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டு வீடு திரும்பினார்.
News August 18, 2025
INDIA கூட்டணியிடம் ஆதரவு கேட்கும் NDA?

NDA கூட்டணி சார்பில் துணை ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக ஆலோசனை நடக்கவுள்ளது. இதனிடையே, மல்லிகார்ஜுன கார்கேவை தொலைபேசியில் தொடர்புகொண்ட மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், NDA வேட்பாளர் CP ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு கோரியதாக தகவல் வெளியாகியுள்ளது. NDA கூட்டணி வேட்பாளருக்கு INDIA கூட்டணி ஆதரவு அளிக்குமா?
News August 18, 2025
BREAKING: கவர்னர் ஆகிறார் எச்.ராஜா

2026 சட்டப்பேரவைத் தேர்தல் வரவிருக்கும் நிலையில், பாஜகவின் கழுகு பார்வை தமிழகத்தை நோக்கியே இருக்கிறது. சி.பி.ராதாகிருஷ்ணன் துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில், எச்.ராஜா கவர்னராக நியமனம் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற கூட்டத் தொடருக்கு பிறகு, மகாராஷ்டிரா (CPR-க்கு பதில்) அல்லது நாகலாந்து (இல.கணேசனுக்கு பதில்) கவர்னராக எச்.ராஜா நியக்கப்படலாம் என தெரிகிறது.