News March 29, 2025

என்கவுன்டரில் 15 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை

image

சத்தீஸ்கரில் இன்று அதிகாலை நடந்த தேடுதல் வேட்டையில் 15 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். சுக்மா – தண்டேவாடா எல்லையில் உள்ள வனப்பகுதியில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையின் போது தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டதாக சுக்மா மாவட்ட எஸ்.பி. கிரண் சவான் தெரிவித்துள்ளார். கடந்த சில நாள்களுக்கு முன்பு நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் 22 பேர் உயிரிழந்தது கவனிக்கத்தக்கது.

Similar News

News September 18, 2025

அதிகமாக டீ, காபி குடிக்கிறீங்களா? எச்சரிக்கை!

image

ஒருநாளுக்கு 2 முறைக்கும் அதிகமாக டீ, காபி குடிப்பவர்களுக்கு பல பிரச்னைகள் ஏற்படும் என டாக்டர்கள் எச்சரிக்கிறாங்க. டீ-யில் உள்ள Tanin, காபியில் உள்ள கஃபைன் உடலை இரும்பு சத்தை உறிஞ்சவிடாமல் தடுக்கிறதாம். இதனால் ரத்தசோகை ஏற்படுகிறது. மேலும், High BP, அஜீரண கோளாறு, அல்சர், மூட்டு வலி, இருதய பிரச்னைகள் கூட வரும் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். ஒருநாளுக்கு எத்தனை கப் டீ/காபி குடிப்பீங்க?

News September 18, 2025

ChatGPT-ஐ மக்கள் இதற்கு தான் யூஸ் பண்றாங்களா!

image

உலகளவில் மக்கள், AI சாட்பாட்டான ChatGPT-ஐ எதற்கு அதிகமாக பயன்படுத்துகிறார்கள் என்பது குறித்து OpenAI ஆய்வு நடத்தியது. அதில் உலக மக்களில் 49% பேர் கேள்விகளை கேட்டு பதில் பெறும் அஸிஸ்டெண்டாகவும், 40% பேர் ஒரு வேலையை செய்து முடிக்க அதை ஒரு வழிகாட்டியாக பயன்படுத்துவதாகவும் தெரியவந்துள்ளது. அதேபோல், உலகில் ChatGPT-ஐ அதிகம் பயன்படுத்துவதில் இந்தியா 2-ம் இடத்தில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

News September 18, 2025

தவெகவில் இணைகிறேனா? அதிகாரப்பூர்வ விளக்கம்

image

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட பெங்களூரு புகழேந்தி உள்ளிட்டோர் தவெகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியானது. இதுகுறித்து பேசிய புகழேந்தி, தான் தவெகவில் இணையவில்லை. ஆனால், எம்ஜிஆர், அண்ணா போன்ற திராவிட தலைவர்களை முன்னிலைப்படுத்தும் விஜய்யை தூக்கிப்பிடிப்பதில் என்ன தவறு இருக்கிறது என்று தெரிவித்துள்ளார். விஜய்யின் தாக்கம் பயங்கரமாக இருக்கிறது; அவர் பின்னால் செல்லும் கூட்டம் பலருக்கு வேட்டாக மாறும் என்றார்.

error: Content is protected !!