News March 29, 2025
என்கவுன்டரில் 15 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை

சத்தீஸ்கரில் இன்று அதிகாலை நடந்த தேடுதல் வேட்டையில் 15 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். சுக்மா – தண்டேவாடா எல்லையில் உள்ள வனப்பகுதியில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையின் போது தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டதாக சுக்மா மாவட்ட எஸ்.பி. கிரண் சவான் தெரிவித்துள்ளார். கடந்த சில நாள்களுக்கு முன்பு நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் 22 பேர் உயிரிழந்தது கவனிக்கத்தக்கது.
Similar News
News November 26, 2025
ஓபிஎஸ், டிடிவி தினகரனின் பிளான் தோல்வியா?

அதிமுக ஒருங்கிணைப்பு என்ற திட்டத்திலிருந்து செங்கோட்டையன் பின் வாங்கியதன் விளைவே மாற்றுக் கட்சியில் இணையும் முடிவு. தவெகவா (அ) திமுகவா என்பதை மட்டுமே அவர் இன்னும் இறுதி செய்யவில்லை. இதுவொருபுறம் இருக்க, அதிமுக ஒருங்கிணைப்பு என செங்கோட்டையன் வாயிலாக காய்நகர்த்தி வந்த ஓபிஎஸ், டிடிவி தினகரனின் முயற்சி முற்றிலும் தோல்வி அடைந்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறி வருகின்றனர். உங்கள் கருத்து என்ன?
News November 26, 2025
ALERT: 16 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்

வங்கக்கடலில் புயல் உருவாகியுள்ள நிலையில், நவ.29-ம் தேதி 6 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த RED ALERT-யை X தளத்தில் இருந்து IMD நீக்கியுள்ளது. அதேநேரம், நவ.29-ம் தேதி சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, பெரம்பலூர் உள்ளிட்ட 16 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ‘ஆரஞ்சு அலர்ட்’ விடுத்துள்ளது.
News November 26, 2025
செங்கோட்டையன் ராஜினாமா செய்தது ஏன்?

பொதுவாக ஒரு கட்சியில் MLA-வாக இருப்பவர், பதவியை ராஜினாமா செய்யாமல் வேறு கட்சிக்கு தாவினால் சிக்கல் ஏற்படும். கட்சித் தாவல் தடைச் சட்டப்படி சபாநாயகர் அந்நபரை தகுதி நீக்கம் செய்யலாம். எனவேதான் KAS தன்னுடைய MLA பதவியை தற்போது ராஜினாமா செய்துள்ளார். இதேபோலதான் 2017-ல் தினகரன் ஆதரவு அதிமுகவினர் 18 பேரை இச்சட்டத்தின் கீழ் அப்போதைய சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்திருந்தார்.


