News March 17, 2024

பள்ளிபாளையத்தில் நாய் கடித்து 15 பேர் காயம்

image

பள்ளிபாளையம் நகராட்சிக்குட்பட்ட பல்வேறு இடங்களில், அதிக அளவு தெரு நாய்கள் சுற்றுகிறது. இந்நிலையில் நேற்று மாலை சுமார் 15 நபர்களை தெரு நாய் கடித்தது. நாய் கடித்து  பாதிக்கப்பட்டவர்கள், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில், ஒன்பது பேர் பள்ளிபாளையம் அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் பள்ளிபாளையத்தில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

Similar News

News December 30, 2025

நாமக்கல்: 4 சக்கர வாகன இரவு ரோந்து போலீசார் விவரம்

image

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 6 காவல் அலுவலர்கள் இரவு நான்கு சக்கர வாகன ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அதன்படி இன்று டிசம்பர்.30 நாமக்கல்-(சக்திவேல் – 9498168613) ,வேலூர் -(சுகுமாரன் – 8754002021), ராசிபுரம் -(சின்னப்பன் – 949816909), பள்ளிபாளையம்-(பெருமாள் – 9498169222 ) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.

News December 30, 2025

நாமக்கல்: PAN CARD-ல் கட்டாயம்.. நாளை கடைசி!

image

நாமக்கல் மக்களே, அரசின் நலத்திட்டங்களை பெறுவதற்கும், வங்கி தொடர்பான செயல்பாடுகளுக்கும் நமக்கு PAN Card தேவைப்படுகிறது. இந்நிலையில், மத்திய அரசின் நேரடி வரிகள் வாரியம் டிச.31-ம் தேதிக்குள் PAN அட்டையை ஆதார் அட்டையுடன் இணைக்க அறிவுறுத்தியுள்ளது. இதற்காக நீங்கள் எங்கும் அலைய தேவையில்லை. இந்த லிங்கை <>கிளிக் <<>>செய்து உங்கள் ஆதார் அட்டை,PAN card உடன் இணைக்கப்பட்டுள்ளதா என தெரிந்து கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க.

News December 30, 2025

ஒரு வாரத்திற்கும் மேலாக முட்டை விலையில் மாற்றம் இல்லை

image

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை ரூ. 6.40- ஆக நீடித்து வந்தது. இந்த நிலையில் இன்று நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், அதன் விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. எனவே முட்டை கொள்முதல் விலை ரூ. 6.40- ஆக நீடித்து வருகின்றது. கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக முட்டை விலை மாற்றம் இன்றி நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!