News March 17, 2024

பள்ளிபாளையத்தில் நாய் கடித்து 15 பேர் காயம்

image

பள்ளிபாளையம் நகராட்சிக்குட்பட்ட பல்வேறு இடங்களில், அதிக அளவு தெரு நாய்கள் சுற்றுகிறது. இந்நிலையில் நேற்று மாலை சுமார் 15 நபர்களை தெரு நாய் கடித்தது. நாய் கடித்து  பாதிக்கப்பட்டவர்கள், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில், ஒன்பது பேர் பள்ளிபாளையம் அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் பள்ளிபாளையத்தில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

Similar News

News December 16, 2025

நாமக்கல்: NO EXAM ரயில்வே வேலை…அரிய வாய்ப்பு!

image

இந்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள 1785 அப்ரண்டீஸ் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இந்த வேலைக்கு 10th தேர்ச்சி தகுதி, சம்பளம் தோராயமாக ரூ.15,000 வழக்கப்படும். விருப்பமுள்ளவர்கள் நாளை டிச.17ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விபரம் மற்றும் விண்ணப்பிக்க இந்த லிங்கை <>க்ளிக் <<>>செய்வும். வேலைவாய்ப்பு வேண்டி காத்திருக்கும் யாருக்காவது நிச்சயம் உதவும். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News December 16, 2025

நாமக்கல்லில் ஜல்லிக்கட்டு போட்டி!

image

நாமக்கல் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை தொடா்ந்து ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும். குமாரபாளையம், சேந்தமங்கலம், எருமப்பட்டி சுற்றுவட்டாரங்களில் இளைஞா்கள் தாங்கள் வளா்க்கும் காளைகளை தயாா் செய்து வருகின்றனா். குறிப்பாக, கிணறு, ஏரிகளில் நீச்சல் பயிற்சி அளிப்பது, மண்ணைக் குத்தி மிரட்டல் பாா்வை விடுப்பது, தலையை சுழற்றுவது, வீரா்களை நெருங்கவிடாமல் செய்வது போன்ற உத்திகளை பழக்கி வருகின்றனர்.

News December 16, 2025

குமாரபாளையத்தில் வசமாக சிக்கிய நபர்: அதிரடி கைது!

image

குமாரபாளையம்: வட்டமலை பகுதியில் ஓட்டல் நடத்தி வருபவர் இளங்கோ (46). இவர் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக குமாரபாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அங்கு மதுபாட்டில்களில் அதிக போதை கொடுக்கும் திரவம் கலந்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்த 40 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

error: Content is protected !!