News March 17, 2024
பள்ளிபாளையத்தில் நாய் கடித்து 15 பேர் காயம்

பள்ளிபாளையம் நகராட்சிக்குட்பட்ட பல்வேறு இடங்களில், அதிக அளவு தெரு நாய்கள் சுற்றுகிறது. இந்நிலையில் நேற்று மாலை சுமார் 15 நபர்களை தெரு நாய் கடித்தது. நாய் கடித்து பாதிக்கப்பட்டவர்கள், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில், ஒன்பது பேர் பள்ளிபாளையம் அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் பள்ளிபாளையத்தில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
Similar News
News January 9, 2026
நாமக்கல்: வீட்டில் சிலிண்டர் இருக்கா?

கேஸ் சிலிண்டருக்கு மானியம் வருகிறதா? என்பதை SMS அனுப்பி தெரிந்து கொள்ளலாம். இண்டேன் சிலிண்டர் பயன்படுத்துவோர் ‘REFILL’ என டைப் செய்து 77189 55555 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். பாரத் சிலிண்டர் பயன்படுத்துவோர் 18002 24344 என்ற எண்ணுக்கும், எச்.பி. சிலிண்டர் பயன்படுத்துவோர் 1906 என்ற எண்ணுக்கும் அனுப்பி தெரிந்து கொள்ளலாம். (ஷேர் செய்யுங்கள்)
News January 9, 2026
ராசிபுரத்தில் சம்பவ இடத்திலேயே பெண் பலி!

ராசிபுரம் அணைப்பாளையத்தை சேர்ந்தவர் லட்சுமி(60).இவர் நேற்று மாலை, சக்திநகரில் உள்ள பேத்தியின் வீட்டிற்கு சென்றுள்ளார்.பின் அங்கிருந்து பஸ் மூலம் வீட்டிற்கு செல்ல ஆண்டகலூர் கேட்டிற்கு சாலையோரமாக நடந்து வந்து கொண்டிருந்தார்.அப்போது அவ்வழியாக வந்த கார் லட்சுமி மீது மோதியது.இந்த விபத்தில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து ராசிபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
News January 9, 2026
திரைபடத்தில் களம் இறங்கிய நாமக்கல் எம்பி!

திண்டுக்கல் ஐ.லியோனியின் மகன் லியோ சிவக்குமாா் கதாநாயகனாக நடிக்கும் ‘டெலிவரி பாய்’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் நாமக்கல் மக்களவை உறுப்பினா் வி.எஸ்.மாதேஸ்வரன் நடித்துள்ளாா். இதுகுறித்து அவா் கூறியதாவது: அரசியலுக்கு வருவதற்கு முன்பே சிறு, சிறு வேடங்களிலும் நடித்துள்ளேன். அந்த வகையில் டெலிவரி பாய் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க அழைப்பு வந்தது. அதனால் ஏற்றுக்கொண்டு நடித்தேன் என்றார்.


