News March 17, 2024
பள்ளிபாளையத்தில் நாய் கடித்து 15 பேர் காயம்

பள்ளிபாளையம் நகராட்சிக்குட்பட்ட பல்வேறு இடங்களில், அதிக அளவு தெரு நாய்கள் சுற்றுகிறது. இந்நிலையில் நேற்று மாலை சுமார் 15 நபர்களை தெரு நாய் கடித்தது. நாய் கடித்து பாதிக்கப்பட்டவர்கள், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில், ஒன்பது பேர் பள்ளிபாளையம் அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் பள்ளிபாளையத்தில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
Similar News
News December 24, 2025
பரமத்தி வேலூர் வசமாக சிக்கிய நபர்!

பரமத்தி அருகே அமைந்துள்ள வாழவந்தி பகுதியில் லாட்டரி விற்பனை அதிக அளவு நடப்பதாக போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பெயரில் டிஎஸ்பி சங்கீதா தலைமையிலான போலீசார் தீவிர ஆய்வு நடத்தியதில் வாழவந்தி பகுதி சேர்ந்த அசோகன் என்பவர் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரிகளை விற்பனை செய்வதை கண்டறிந்தனர். இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.
News December 24, 2025
நாமக்கல்: ஈஸியா பட்டா பெறுவது எப்படி ?

நாமக்கல் மக்களே புதிதாக வீடு அல்லது நிலம் வாங்கினால் பத்திரம் முடிப்பதை போல, பட்டா வாங்குவதும் மிக முக்கியமான ஒன்றாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பட்டாவை ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்காமல் பெற முடியுமா? ஆம், eservices.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று, அதில் ‘Apply Patta transfer’ என்று ஆப்ஷன் மூலமாக வீட்டிலிருந்த படியே புதிய பட்டாவிற்கு விண்ணப்பிக்கலம். (SHARE பண்ணுங்க)
News December 24, 2025
ராசிபுரத்தில் கடத்திக் கொலை: சிக்கிய குற்றவாளி!

ராசிபுரம் அரிசி வியாபாரி லோகநாதன் தொழில் போட்டி காரணமாக கடத்திக் கொலை செய்யப்பட்ட வழக்கில், தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி விஜயகுமார் (49) செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார். இவரே இந்தக் கொலைக்கு மூளையாகச் செயல்பட்டவர் எனப் போலீஸார் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே இருவர் கைதான நிலையில், தற்போது முக்கிய நபர் சிக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


