News July 6, 2025
15 வயது சிறுவன் தற்கொலை போலீசார் விசாரணை

வேலூர் நெல்வாய் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் மேஸ்திரி. இவரது மகன் தனசேகரன்(15) தனது பிறந்த நாளை முன்னிட்டு நண்பர்களுக்கு சாக்லெட் வாங்கித்தர ஆயிரம் ரூபாய் வேண்டும் என பெற்றோரிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் கூலி வரவில்லை வந்ததும் தருகிறோம் என்று கூறியுள்ளனர். இதனால் விரக்தியடைந்த தனசேகரன் நேற்றிரவு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News August 21, 2025
வேலூரில் இன்று மின் தடை உள்ள பகுதிகள்

வேலூர் மாவட்டம் புதிய பேருந்து நிலையம், பைபாஸ் சாலை, தோட்டப்பாளையம், பழைய பேருந்து நிலையம், டவுன் பஜார், சலவன்பேட்டை,ஆபீசர்ஸ் லைன், அப்துல்லாபுரம, பிஷப் டேவிட் நகர், கஸ்பா, ஊசூர், கொணவட்டம்,சேண்பாக்கம், விருதம்பட்டு, செங்காநத்தம் ரோடு, கொசப்பேட்டை, ஓல்டு டவுன், சார்பனாமேடு, பிடிசி சாலை, வல்லண்டராமம், விரிஞ்சிபுரம், இறைவன்காடு, செதுவாலை, கந்தனேரி, அன்பூண்டி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.
News August 20, 2025
வேலூர் இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

வேலூர் மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இன்று (ஆக.20) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்கள் வெளியிடப்பட்டு உள்ளது. ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கான தகவல்கள் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்க தொடர்பு கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க.
News August 20, 2025
வேலூர் இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் மற்றும் முக்கிய இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணி செய்து வருகின்றனர் அதன்படி இன்று (ஆகஸ்ட் 20) இரவு வந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது இரவு நேரங்களில் வேலைக்கு செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.