News March 12, 2025
15 மண்டலங்களில் சார்ஜிங் நிலையங்கள்

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில், மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையங்கள் அமைக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. பசுமை எரிசக்தி கழகத்துடன் இணைந்து, 89 பார்க்கிங் இடங்களில் சார்ஜிங் நிலையங்களை அமைக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. மாநகராட்சி நிலங்களை அடையாளப்படுத்தியதற்கு பிறகு சார்ஜிங் நிலையங்கள் அமைப்பதற்கான பணிகள் தொடங்க உள்ளது. இதன் மூலம் எலக்ட்ரிக் கார், பைக்கிற்கு சார்ஜ் செய்யலாம்.
Similar News
News September 12, 2025
சென்னை மெட்ரோ வாட்ஸ்அப் டிக்கெட் சேவை பாதிப்பு

வாட்ஸ்அப் ஆன்லைன் டிக்கெட்டில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, சென்னை மெட்ரோவின் வாட்ஸ்அப் சாட்பாட் சேவை தற்காலிகமாக இயங்கவில்லை. பயணிகள் CMRL மொபைல் செயலி, Paytm, PhonePe, Singara Chennai Card மற்றும் பயண அட்டைகள் மூலம் டிக்கெட்டுகளை பெறலாம். மேலும் தகவல் வரும் வரை கவுண்டர்களிலும் டிக்கெட் வழங்கப்படும் என CMRL அறிவித்துள்ளது.
News September 12, 2025
சென்னையில் தீரா நோய்களை தீர்க்கும் திருச்செந்தூர் முருகன்

சென்னை கே.கே நகரில் புகழ்பெற்ற ‘திருச்செந்தூர் முருகன் கோயில்’ உள்ளது. பொதுவாக திருச்செந்தூரில் உள்ள முருகன் கோயிலுக்கு செல்ல முடியாதவர்கள் கே.கே நகரில் அமைந்துள்ள இக்கோயிலுக்கு வந்து திருச்செந்தூர் முருகனை வணங்கி வழிபடுகின்றனர். இக்கோயிலுக்கு வந்து வழிபட்டால், தீராத நோய்களும் தீரும் என்றும், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்றும் பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. ஷேர் பண்ணுங்க.
News September 12, 2025
தூய்மை பணியாளர்கள் மயக்கம்

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து சென்னை புறநகர் பகுதிகளில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வகையில் இன்று சென்னை காமராஜர் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்ட பொழுது 2 தூய்மை பணியாளர்கள், உணவுகளை உட்கொள்ளாமல் போராட்டத்தில் ஈடுபட்டதால் மயக்கம் அடைந்து சம்பவ இடத்திலேயே விழுந்தனர். இதனையடுத்து அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர்.