News December 11, 2024

செயல்படாத ஜன்தன் கணக்குகளில் ரூ.14,750 கோடி

image

செயல்படாத ஜன்தன் வங்கிக் கணக்குகளில் ரூ.14,750 கோடி பணம் தேங்கி கிடப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மாநிலங்களவையில் மத்திய நிதியமைச்சர் பங்கஜ் செளத்ரி எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில், நவ.20ஆம் தேதி நிலவரப்படி நாடு முழுவதும் 54.03 கோடி ஜன் தன் கணக்குகள் தொடங்கப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளார். அதில் 11.30 கோடி கணக்குகள் செயல்படாமல் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

Similar News

News August 27, 2025

ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் மல்லி தேநீர்!

image

கொத்தமல்லி விதை & தழைகளில் உள்ள பைட்டோஸ்டெரால் ரசாயனம் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தி, மாரடைப்பு அபாயத்தை குறைப்பதாக சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர். கொத்தமல்லி விதை & தழை, சுக்கு, மிளகு, மஞ்சள், நட்சத்திரப் பூ, ஏலக்காய் பொடி சேர்த்து நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி, பனங்கற்கண்டு சேர்த்தால், மணமிக்க சுவையான மல்லி தேநீர் ரெடி. இந்த டீயை எப்போது வேண்டுமானாலும் பருகலாம். SHARE IT.

News August 27, 2025

OTP பெறாமல் ஆன்லைன் சேவைகளே கிடையாது: HC

image

மத்திய, மாநில & தனியார் நிறுவனங்கள் பல்வேறு சேவைகளுக்காக OTP பெறுவது தனியுரிமை விதிகளுக்கு முரணானது என கூறி, OTP-க்கு தடை விதிக்க மதுரை HC-ல் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த ஐகோர்ட், இன்றைய காலகட்டத்தில் OTP பெறாமல் எந்த ஒரு ஆன்லைன் சேவையும் நடைபெறாது என தெரிவித்து, மனுவை தள்ளுபடி செய்தது. முன்னதாக, ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற DMK முன்னெடுப்பில் OTP பெறுவதற்கு HC தடை விதித்தது.

News August 27, 2025

மீண்டும் அதிமுகவில் இணைய முடியாது.. EPS அதிரடி முடிவு

image

பாஜக கூட்டணியிலிருந்து விலகிய <<17528723>>OPS<<>>, நிபந்தனையின்றி அதிமுகவில் இணைய தயார் கூறியதற்கு, ‘இணைக்க மாட்டோம்’ என்று கடந்த வாரம் EPS திட்டவட்டமாக மறுத்துவிட்டார். இந்நிலையில், நேற்று ஒன்றிணைய வேண்டும் என EPS-க்கு மீண்டும் அழைப்பு விடுத்தார். இதுகுறித்து மூத்த தலைவர்கள் EPS-யிடம் ஆலோசிக்கையில், அவரை நீக்கியது நீக்கியதுதான், மீண்டும் இணைப்பு குறித்து பேச வேண்டாம் என EPS முற்றுப்புள்ளி வைத்துவிட்டாராம்.

error: Content is protected !!