News December 28, 2024
147 ஆண்டுகள்: இளம் ரத்தம் படைத்த சாதனை

AUSக்கு எதிரான 4ஆவது டெஸ்ட்டின் இன்றைய ஆட்டத்தில் 176 பந்துகளை எதிர்கொண்டு நிதிஷ்குமார் 105 ரன்களை எடுத்தார். அதேபோல், வாஷிங்டன் சுந்தர் 162 பந்துகளை எதிர்கொண்டு 50 ரன்களை எடுத்தார். இதன்மூலம், டெஸ்ட் கிரிக்கெட்டில் 147 ஆண்டுகால வரலாற்றில் இந்த ஜோடி இடம்பிடித்துள்ளது. அதாவது, 8 மற்றும் 9ஆவது Positionல் விளையாடும் பேட்ஸ்மேன்கள், தலா 150 பந்துகளை எதிர்கொள்வது இதுவே முதல்முறையாகும்.
Similar News
News July 10, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (ஜூலை 10) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.
News July 10, 2025
X நிறுவன சிஇஓ ராஜினாமா

X நிறுவனத்தின் தலைமை செயலதிகாரியான (சிஇஓ) லிண்டா யாக்காரினோ தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ட்விட்டர் தளத்தை எலான் மஸ்க் விலைக்கு வாங்கி, அதன் பெயரை X என மாற்றினார். அதன்பிறகும் சிஇஓ பதவியில் 2 ஆண்டுகளாக லிண்டா நீடித்தார். இந்நிலையில் தனது பதவி விலகல் குறித்து சமூகவலைதளத்தில் லிண்டா பதிவிட்டுள்ளார். இதை வரவேற்று பதிவிட்டுள்ள எலான் மஸ்க், உங்கள் பங்களிப்புக்கு நன்றி எனக் குறிப்பிட்டுள்ளார்.
News July 10, 2025
மோடிக்கு நாட்டின் உயரிய விருதை வழங்கிய நமீபியா

நமீபியா குடிமக்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான ‘வெல்விட்சியா மிரபலீஸ்’ விருது PM மோடிக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது. உலக அமைதி, சமூக பொருளாதார முன்னேற்றத்தில் சிறப்பான பங்களிப்பை அளித்ததற்காக மோடிக்கு இவ்விருதை நமீபியா வழங்கியுள்ளது. உயரிய விருது தனக்கு வழங்கப்பட்டதை பெருமையாக கருதுவதாக மோடி தெரிவித்தார். சர்வதேச நாடுகளிடம் இருந்து அவருக்கு கிடைக்கும் 27-வது விருது என்பது குறிப்பிடத்தக்கது.