News May 15, 2024
பஞ்சாப் அணிக்கு 145 ரன்கள் இலக்கு

பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 144 ரன்கள் எடுத்துள்ளது. ரியான் பராக் (48), அஸ்வின் (28) மட்டுமே ஓரளவு தாக்குப்பிடித்து ஆடினர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். இதையடுத்து பஞ்சாப் அணிக்கு 145 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. PBKS தரப்பில் ஹர்ஷல் படேல், ராகுல் சாஹர், சாம் கரண் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
Similar News
News November 6, 2025
டிரம்ப் – மோடி அடிக்கடி பேசுகின்றனர்: USA White House

அமெரிக்க அதிபர் டிரம்ப்பும், PM மோடியும் அடிக்கடி தொலைபேசியில் பேசுவதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. செய்தியாளர் சந்திப்பில், இரு நாடுகளின் வர்த்தக குழுக்களும், வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு குறித்து தீவிர விவாதங்களில் ஈடுபட்டு வருவதாக வெள்ளை மாளிகை செய்தி செயலாளர் கரோலின் லீவிட் குறிப்பிட்டார். டிரம்ப், மோடி மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
News November 6, 2025
மனம் உடைந்து வேதனையுடன் பேசிய ராமதாஸ்

அரசியலில் சில தவறுகளை தான் செய்துவிட்டதாக ராமதாஸ் வேதனை தெரிவித்துள்ளார். தான் செய்த தவறுகளில் ஒன்று அன்புமணியை மத்திய அமைச்சராக்கியது; மற்றொன்று கட்சித் தலைவர் பதவியை அவரிடம் கொடுத்தது. அன்புமணியின் பேச்சும், செயலும் அருவருக்கத்தக்கதாக உள்ளதாக சாடிய அவர், அன்புமணி கும்பல் பற்றி பேசினால் என் வளர்ப்பு சரியில்லை என்பீர்கள்; அங்கு உள்ள எல்லோரும் நான் வளர்த்த பிள்ளைகள்தான் என மனம் உடைந்து பேசினார்.
News November 6, 2025
இதெல்லாம் வந்தா இனி மனிதர்களுக்கு சாவே இல்லை!

மனிதன் சாகா வரம் பெற முடியுமா (அ) இறந்த மனிதனுக்கு உயிர் கொடுக்க முடியுமா என்ற ஆராய்ச்சிகள் பல காலமாக நடக்கிறாது. அதன் விளைவாக பல கண்டுபிடிப்புகளும் அறிமுகமாகியுள்ளது. தற்போது சோதனையில் இருக்கும் அந்த ஆராய்ச்சிகள் வெற்றியை கண்டுவிட்டால் மனிதர்களால் சாகாமல் பல நூற்றாண்டுகளுக்கு வாழமுடியுமாம். அது என்னென்ன ஆராய்ச்சிகள் என்பதை தெரிந்துகொள்ள போடோக்களை SWIPE பண்ணுங்க. உங்களுக்கு எவ்வளவு நாள் வாழ ஆசை?


