News March 28, 2025

145 துணை பிடிஒ இடம் மாற்றம்- ஆட்சியர் உத்தரவு பரபரப்பு

image

சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மற்றும் ஊராட்சி ஒன்றியங்களில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நிலையில் பணிபுரிந்து வரும் 145 பேர் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி தாரமங்கலத்தில் இருந்த வசந்தா நங்கவள்ளி ஒன்றியத்திற்கும், ஏற்காட்டில் இருந்த மணிகண்டன் மகுடஞ்சாவடி ஒன்றியத்திற்கும், சேலத்தில் இருந்த அமுதா தாரமங்கலத்திற்கும், மேச்சேரியில் இருந்த சரவணன் காடையாம்பட்டிக்கும் என 145 பேர் மாற்றம்.

Similar News

News December 9, 2025

சேலம்: விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் முழு மானியம்

image

சேலம் மாவட்ட தோட்டக்கலைத் துறையின் மூலம், செயல்படுத்தப்படும் வேளாண் காடுகள் திட்டத்தின் கீழ், மார்க்கோனி மற்றும் தேக்கு மரக்கன்றுகள் விவசாயிகளுக்கு முழு மானியத்தில் வழங்கப்பட உள்ளதாக, மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார். வரப்பு ஓரத்திற்கு ஒரு ஏக்கருக்கு 160 மரக்கன்றுகளும், வயல் முழுவதும் நட 500 மரக்கன்றுகளும் என ஒரு விவசாயிகளுக்கு அதிகபட்சமாக 2 எக்டர் நடவு செய்ய வழங்கப்படும் என்றார்.

News December 9, 2025

சேலம்: கேழ்வரகு விவசாயிகளுக்கான அறிவிப்பு

image

தமிழ்நாட்டில் கேழ்வரகு பயிரிடும் விவசாயிகள் பயனடையும் வகையில், உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் அரசாணையில் உள்ள நெறிமுறைகளின்படி உரிய அனுமதி பெற்று தமிழ்நாடு நுகர்பொருள் கழகத்தினால், அந்தந்த மாவட்டங்களில் இந்திய அரசின் பரவலாக்கப்பட்ட கொள்முதல் திட்டத்தின் கீழ் நேரடி கொள்முதல் செய்யப்படுகிறது. மேலும் www.tncsc.tn.gov.inஇணையத்தில் பதிவு செய்து பயன்பெறலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News December 9, 2025

சேலம் ரயில் பயணிகள் கவனத்திற்கு!

image

கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்காக மைசூரில் இருந்து சேலம் வழியாக தூத்துக்குடிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. மைசூரு – தூத்துக்குடி ரயில் (06283) டிசம்பர்-23,27 தேதியில் மைசூரில் மாலை 6.35 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 11 மணிக்கு தூத்துக்குடி சென்றடையும். தூத்துக்குடி – மைசூரு ரயில் (06284) டிசம்பர்-24,28 தேதியில் தூத்துக்குடியில் மதியம் 2 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.45 மைசூரு சென்றடையும்.

error: Content is protected !!