News March 28, 2025
145 துணை பிடிஒ இடம் மாற்றம்- ஆட்சியர் உத்தரவு பரபரப்பு

சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மற்றும் ஊராட்சி ஒன்றியங்களில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நிலையில் பணிபுரிந்து வரும் 145 பேர் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி தாரமங்கலத்தில் இருந்த வசந்தா நங்கவள்ளி ஒன்றியத்திற்கும், ஏற்காட்டில் இருந்த மணிகண்டன் மகுடஞ்சாவடி ஒன்றியத்திற்கும், சேலத்தில் இருந்த அமுதா தாரமங்கலத்திற்கும், மேச்சேரியில் இருந்த சரவணன் காடையாம்பட்டிக்கும் என 145 பேர் மாற்றம்.
Similar News
News December 6, 2025
சேலத்தில் மேள தொழிலாளி கொலை!

அயோத்தியாப்பட்டணம் அடுத்த மின்னாம்பள்ளி பகுதியைச் சேர்ந்த ஜெயகாந்த் (23).மேளம் அடிக்கும் தொழில் செய்து வந்தார். இவரை கடந்த 1ல், இரவு 6 பேர் கொண்ட கும்பல் போதையில் தாக்கி தலையில் கல்லைத்தூக்கி போட்டு சென்றனர். இதில் பலத்த காயமடைந்த ஜெயகாந்த் உயிரிழந்தார். இந்த வழக்கில் ஏற்கனவே சிறுவன் உள்ளிட்ட 5 பேரை காரிப்பட்டி போலீசார் கைது செய்துள்ளனர். தற்போது இவ்வழக்கு கொலை வழக்காக மாற்றம் செய்துள்ளனர்.
News December 6, 2025
சேலம்: இழந்த பணத்தை திரும்ப பெற வேண்டுமா?

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!
News December 6, 2025
சேலம்: இதை கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க!

வீடு, அலுவலகம், பொது இடம், பேருந்து என அனைத்து இடங்களிலும் பெண்கள் & குழந்தைகளின் பாதுகாப்பு கேள்வி குறியே. எனவே, பெண் மீதான வன்கொடுமை- 181, ராகிங்-155222, பெண்கள் & குழந்தைகள் மிஸ்ஸிங்- 1094, குழந்தைகள் பாதுகாப்பு- 1098, மனஉளைச்சல்- 9911599100, தேசிய பெண்கள் ஆணையம்- 01126944754, 26942369, தமிழ்நாடு பெண்கள் ஆணையம்- 044 28592750 என்ற எண்களை சேவ் பண்ணுவது அவசியமானதாகும். தெரிந்த பெண்களுக்கு பகிரவும்


