News April 20, 2024
144 தடை: ஆய்வு செய்யும் உச்சநீதிமன்றம்

தேர்தல்களை மட்டும் காரணமாக வைத்து, 144 தடை அமல்படுத்தப்படுவதை உச்சநீதிமன்றம் ஆய்வு செய்யவுள்ளது. ராஜஸ்தானின் பார்மரில் தேர்தலை காரணமாக வைத்து அமல்படுத்தப்பட்ட 144 தடையை எதிர்த்து தாக்கலான மனுவில், வாக்காளர் விழிப்புணர்வு கூட்டம் நடத்த அனுமதிக்கவில்லை என கூறப்பட்டிருந்தது. இதை விசாரித்த நீதிபதிகள், கூட்டத்தை அனுமதிப்பது குறித்து 3 நாளில் முடிவெடுக்க உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தது.
Similar News
News August 18, 2025
விசிக – சிபிஎம் இடையே கருத்து மோதல்: கூட்டணியில் சலசலப்பு

தூய்மை பணியாளர்களின் பணி நிரந்தர விவகாரத்தில் திமுக கூட்டணிக்குள் மோதல் நிலவுகிறது. குப்பை அள்ளுபவர்களை பணி நிரந்தரம் செய்து அவர்களை குப்பை மட்டுமே அள்ள சொல்வதில் உடன்பாடு இல்லை என திருமாவளவன் தெரிவித்திருந்தார். இதனை எதிர்த்த சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம், பணி நிரந்தரம் என்பது சட்டப்பூர்வமான கோரிக்கை என வலியுறுத்தியுள்ளார். இதனால், கூட்டணிக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. யாருடைய கருத்து சரி?
News August 18, 2025
பாடகர் வேடன் மீது மேலும் 2 பெண்கள் புகார்!

பிரபல ராப் பாடகர் வேடன் மீது மேலும் இரு பெண்கள் பாலியல் வன்கொடுமை புகார் அளித்துள்ளனர். இந்த புகாரை அவர்கள் நேரடியாக கேரள CM பினராயி விஜயன் மற்றும் அம்மாநில DGP ஆகியோரிடம் அளித்திருக்கின்றனர். ஹிரன்தாஸ் முரளி என்ற வேடன் மீது ஏற்கெனவே பெண் டாக்டர் ஒருவர் தொடுத்த வழக்கில் அவர் தலைமறைவாக இருந்து வருகிறார். இந்த வழக்கில் அவர் கொடுத்த ஜாமின் மனு மீதான விசாரணை இன்று நடைபெறுகிறது.
News August 18, 2025
தேர்தல் ஆணையத்திற்கு CM ஸ்டாலின் சரமாரி கேள்வி..

வாக்கு திருட்டு தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு தேர்தல் ஆணையம் பதிலளித்திருந்த நிலையில், மேலும் பல கேள்விகளை அடுக்கியுள்ளார் CM ஸ்டாலின். *வீடுதோறும் கணக்கெடுப்பு நடத்தியும், எப்படி இத்தனை தகுதியான வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்? *ஆதாரை ஆவணமாக ஏற்கத் தேர்தல் ஆணையத்தை தடுப்பது எது?*எத்தனை இளம் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர் என்பதைச் சொல்லும் தரவுகள் இருக்கிறதா? என கேள்வி எழுப்பியுள்ளார்.