News February 13, 2025

வங்கதேச கலவரத்தில் 1,400 பேர் சாவு.. ஐ.நா. தகவல்

image

வங்கதேசத்தில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா ஆட்சிக்கு எதிராக கடந்தாண்டு போராட்டம் வெடித்தது. அதை கட்டுப்படுத்த ஷேக் ஹசீனா அரசு எடுத்த நடவடிக்கையால், பல இடங்களில் கலவரம் வெடித்தது. இதனால் பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்தார். இந்த கலவரம் குறித்து ஐநா மனித உரிமை கவுன்சில் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கலவரத்தில் ஏறத்தாழ 1,400 பேர் பலியானதாக கூறப்பட்டுள்ளது.

Similar News

News February 14, 2025

கைக் குழந்தையுடன் தீபிகா படுகோன்.. இதுதான் உண்மை

image

தீபிகா படுகோன், ரன்வீர் சிங் தம்பதிக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பெண் குழந்தை பிறந்தது. ஆனால் இதுவரை அவர்கள் அக்குழந்தை படத்தை வெளியிடவில்லை. இந்நிலையில், தீபிகா படுகோன் கைக்குழந்தையுடன் இருப்பது போன்ற புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது. ஆனால் அது உண்மையில்லை, ஏஐ தொழில்நுட்பத்தில் உருவானது. இதேபோல், டிசம்பரிலும் போலி படம் வைரலானது.

News February 14, 2025

சிஆர்பிஎஃப் வீரர் வெறிச்செயல்!

image

மணிப்பூரில் சிஆர்பிஎஃப் துணை ராணுவப் படை முகாமில் அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. 120வது பட்டாலியனைச் சேர்ந்த காவலர் சஞ்சய் குமார் என்பவர் இன்று காலை திடீரென தனது துப்பாக்கியை எடுத்து சக வீரர்களை நோக்கி சரமாரியாக சுட்டுள்ளார். இதில் 3 சிஆர்பிஎஃப் வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 8 வீரர்கள் படுகாயமடைந்தனர். அதன் பிறகு, தன்னை தானே சுட்டுக் கொண்டு சஞ்சய் குமார் தற்கொலை செய்து கொண்டார்.

News February 14, 2025

இந்திய வீரர்கள் மனைவிகளை அழைத்துச்செல்ல தடை?

image

சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு இந்திய வீரர்கள் தங்களது மனைவிகளை அழைத்துச்செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. BCCI-யின் புதிய பயணக் கொள்கை இந்த தொடரில் முதல் முறையாக அமலுக்கு வருவதாகவும் கூறப்படுகிறது. மனைவி மற்றும் குடும்ப உறுப்பினர்களை அழைத்துச்செல்வதால் வீரர்களின் விளையாட்டுத் திறன் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

error: Content is protected !!