News April 26, 2025

14 தீவிரவாதிகள் : வெளியான அதிர்ச்சி தகவல்

image

பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட 14 தீவிரவாதிகள் குறித்த தகவலை புலனாய்வு அமைப்புகள் வெளியிட்டுள்ளன. 20-40 வயதுடைய இவர்கள் பாகிஸ்தானின் நிதியுதவியுடன் J&K-ல் தங்கி, தீவிரவாத நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். மேலும், இவர்கள் லஷ்கர்-இ-தொய்பா, ஹிஸ்புல் முஜாஹிதின் மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது போன்ற தடை செய்யப்பட்ட அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் என்றும் புலனாய்வு அமைப்புகள் தெரிவிக்கின்றன.

Similar News

News November 8, 2025

சீமானின் பொது சேவை தொடர EPS வாழ்த்து

image

சீமானின் பிறந்தநாளையொட்டி EPS அவருக்கு இதயங்கனிந்த வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். நீண்ட ஆயுள் மற்றும் உடல் நலத்துடன், தொடர்ந்து பொது சேவையாற்றிட இறைவனை வேண்டுவதாக, தனது X பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். அரசியலில் எதிர் எதிர் நிலைப்பாட்டில் இருந்தாலும், அவரின் மீது உள்ள தனிப்பட்ட மரியாதையின் காரணமாக EPS வாழ்த்து தெரிவித்துள்ளதாக பார்க்கப்படுகிறது.

News November 8, 2025

இந்திய நிறுவனம் மீது தடை விதித்தது உலக வங்கி

image

இந்தியாவின் முன்னணி மின்மாற்றி உற்பத்தி நிறுவனமான TARIL India மீது, உலக வங்கி தடை விதித்துள்ளது. ஊழல் குற்றச்சாட்டு காரணமாக இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. மேலும், உலக வங்கியின் நிதியுதவி பெறும் எந்த திட்டத்திலும் 2029-ம் ஆண்டு வரை இந்த நிறுவனம் பங்கேற்க முடியாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

News November 8, 2025

PAK-AFG சமாதான பேச்சுவார்த்தை நிறுத்தம்

image

PAK-AFG இடையே மோதல் நீடித்து வந்தாலும், மறுபுறும் சமாதான பேச்சுவார்த்தையும் நடைபெற்று வந்தது. இந்நிலையில் பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக பாக்., பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் தெரிவித்துள்ளார். ஆப்கன் வாய்மொழி உத்தரவாதங்களை மட்டுமே அளிக்க விரும்புவதாக கூறிய ஆசிப், 4-வது சுற்று பேச்சுவார்த்தைக்கான எந்தத் திட்டமும் இல்லை என்று கூறியுள்ளார். இதனால் இருநாடுகள் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது.

error: Content is protected !!