News April 26, 2025
14 தீவிரவாதிகள் : வெளியான அதிர்ச்சி தகவல்

பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட 14 தீவிரவாதிகள் குறித்த தகவலை புலனாய்வு அமைப்புகள் வெளியிட்டுள்ளன. 20-40 வயதுடைய இவர்கள் பாகிஸ்தானின் நிதியுதவியுடன் J&K-ல் தங்கி, தீவிரவாத நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். மேலும், இவர்கள் லஷ்கர்-இ-தொய்பா, ஹிஸ்புல் முஜாஹிதின் மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது போன்ற தடை செய்யப்பட்ட அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் என்றும் புலனாய்வு அமைப்புகள் தெரிவிக்கின்றன.
Similar News
News September 13, 2025
மத்திய அரசில் 1,543 வேலைவாய்ப்பு!

மத்திய அரசின் பவர்கிரிட் கார்ப்பரேஷனில், களப்பொறியாளர், கள மேற்பார்வையாளர் பணிகளுக்கு 1,543 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு, எலெக்ட்ரிக்கல்/சிவில் பிரிவுகளில் பி.இ., பி.டெக்., பி.எஸ்சி. (பொறியியல்) பட்டமும், 1 வருட அனுபவமும் அவசியம். இதற்கு, மாதம் ₹30,000-₹1,20,000 வரை சம்பளம் வழங்கப்படும் இந்த வேலைக்கு செப்.17-க்குள் https://www.powergrid.in/en -ல் விண்ணப்பியுங்கள். SHARE பண்ணுங்க.
News September 13, 2025
BCCI புதிய தலைவர் இவரா?

இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் கிரண் மோரே அடுத்த BCCI தலைவர் என தகவல் கசிந்துள்ளது. சமீபத்தில் ரோஜர் பின்னி BCCI தலைவர் பொறுப்பிலிருந்து விலகினார். வரும் 28-ல் BCCI தேர்தல் நடப்பதாக இருந்தது. ஆனால், அனைத்து மாநில கிரிக்கெட் சங்கங்களும் கிரண் மோர் வரவையே ஆமோதித்ததாக கூறப்படுகிறது. இந்திய அணிக்காக 49 டெஸ்ட், 94 ஒருநாள் போட்டிகளில் கிரண் மோர் விளையாடியுள்ளார்.
News September 13, 2025
ஓய்வு பெறும் வரை ‘O’ மட்டும் தான்: EPS தாக்கு

தமிழகத்தில் போதைப் பொருளை கட்டுப்படுத்தாமல் ஓய்வு பெறும் வரை ‘ஓ’ (2.0, 3.0) போட்டவர் முன்னாள் டிஜிபி என EPS விமர்சித்துள்ளார். திருப்பூர் பரப்புரையில் பேசிய அவர், அதிமுக ஆட்சிக்கு வந்ததும் போதைப் பொருள் நடமாட்டத்தை முற்றிலும் தடுத்து நிறுத்துவோம் என வாக்குறுதி அளித்துள்ளார். மக்கள் எப்படி போனாலும், தன் குடும்பத்தினர் செல்வாக்காக வாழ வேண்டும் என்பதே முதல்வரின் நோக்கம் என்றும் சாடினார்.