News February 9, 2025
14 மீனவர்கள் கைது!
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739063111775_55-normal-WIFI.webp)
தமிழக மீனவர்களை கைது செய்து மீண்டும் இலங்கை கடற்படை அட்டூழியம் செய்துள்ளது. வடக்கு மன்னார் கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி ராமேஸ்வரம் மீனவர்களை படகுடன் இலங்கை கடற்படை கைது செய்து அழைத்து சென்றுள்ளது. சமீபகாலமாக நமது மீனவர்கள் மீது தாக்குதல் மற்றும் கைது நடவடிக்கையை இலங்கை அரசு தீவிரப்படுத்தியுள்ளதாக, மீனவர்கள் குடும்பத்தினர் கவலை அடைந்துள்ளனர்.
Similar News
News February 9, 2025
₹100 கோடி கிளப்பில் விடாமுயற்சி!
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_12025/1735904967002_1173-normal-WIFI.webp)
கடந்த 6ம் தேதி வெளியான ‘விடாமுயற்சி’ 3ம் நாளில் உலகளவில் ₹105 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்த ஆண்டின் முதல் ₹100 கோடி வசூல் செய்த தமிழ் படம் என்கிற சாதனையையும் விடாமுயற்சி படைத்துள்ளது. ஆக்ஷன் மாஸ் ஹீரோவான அஜித்தை மாறுபட்ட கோணத்தில் காட்டிய மகிழ்திருமேனியின் படத்தை நீங்கள் பார்த்து விட்டீர்களா… படம் எப்படி இருக்கு?
News February 9, 2025
மீண்டும் இந்திய அணிக்கு கேப்டனாகும் கோலி?
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739071757637_1231-normal-WIFI.webp)
ரோஹித் ஃபார்ம் மீது கடுமையான விமர்சனங்கள் இருப்பதால், BGT கடைசி போட்டியிலேயே களமிறங்கவில்லை. இதனால் அடுத்த டெஸ்ட் கேப்டன் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. மீண்டும் கோலியை கேப்டனாக்க தனது விருப்பத்தை கம்பீர் தெரிவித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. ஆனால், இது அதிகாரப்பூர்வ செய்தி இல்லை. BGT முதல் டெஸ்டில் கேப்டனான பும்ரா சிறப்பாக செயல்பட்டாலும், ஏன் இந்த மாற்றம் என தெரியவில்லை?
News February 9, 2025
திமுக நிர்வாகி எஸ்.கே.நவாப் நீக்கம்
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_122024/1733211418910_1231-normal-WIFI.webp)
கிருஷ்ணகிரி நகரச் செயலாளர் எஸ்.கே.நவாப் கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக திமுக தலைமை அறிவித்துள்ளது. கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கிலும் செயல்பட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி நகராட்சி ஆணையர் அலுவலகத்தில் ரகசிய கேமரா வைக்கப்பட்டதில் இவருக்கு தொடர்பு உள்ளதாக தகவல் வெளியானது கவனிக்கத்தக்கது.