News April 29, 2025
14 தனிப்பிரிவு போலீசார் அதிரடி மாற்றம்

எம்.புதுப்பட்டி காவல் நிலையத்தில் தனிப்பிரிவில் பணியாற்றி வந்த ஜெயக்குமார், மல்லி காவல் நிலைய தனிப்பிரிவிற்கும், சிவகாசி டவுன் காவல் நிலைய தலைமை காவலர் சண்முகராஜ், மாரனேரி காவல் நிலைய தனிப்பிரிவிற்கும், மாரனேரி காவல் நிலைய தலைமை காவலர் கார்த்தி, சிவகாசி டவுன் காவல் நிலைய தனிப்பிரிவிற்கும், சிவகாசி கிழக்கு காவல் நிலைய தலைமை காவலர் பாலசுப்பிரமணியன் திருத்தங்கல்லுக்கும் மாற்றம் செய்யப்பட்டனர்.
Similar News
News November 7, 2025
விருதுநகரில் மாற்றுத்திறனாளிகள் முகாம்.. கலெக்டர் அறிவிப்பு

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் அரசு மருத்துவமனைகளில் மாற்றுத்திறனாளிகளின் நலன் கருதி மாற்றுத்திறனாளிக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம்கள் மாவட்டத்தில் நடைபெற உள்ளது. இந்த முகாமினை மாற்றத்திறனாளிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.
News November 7, 2025
விருதுநகர்: உங்கள் வீட்டில் பெண் குழந்தை உள்ளதா?

விருதுநகர் மக்களே, முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது. 2 அல்லது 3 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இ-சேவை மையம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம். SHARE IT
News November 7, 2025
சிவகாசி: பட்டாசு வியாபாரி தற்கொலை

சிவகாசி அருகே அனுப்பன்குளத்தை சேர்ந்தவர் செண்பகமூர்த்தி (56). பட்டாசு வியாபாரியான இவரது வீட்டில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 91 பவுன் நகை காணாமல் போனது. இதுகுறித்து அவர் சிவகாசி கிழக்கு போலீசில் புகார் கொடுத்தார். இதில் போலீசார் வழக்குப் பதிவு செய்து கடந்த 4 ஆண்டுகளாக விசாரணை நடத்தி வந்தனர். இதனால் மனவிரக்தியில் இருந்த செண்பகமூர்த்தி விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.


