News April 29, 2025

14 தனிப்பிரிவு போலீசார் அதிரடி மாற்றம்

image

எம்.புதுப்பட்டி காவல் நிலையத்தில் தனிப்பிரிவில் பணியாற்றி வந்த ஜெயக்குமார், மல்லி காவல் நிலைய தனிப்பிரிவிற்கும், சிவகாசி டவுன் காவல் நிலைய தலைமை காவலர் சண்முகராஜ், மாரனேரி காவல் நிலைய தனிப்பிரிவிற்கும், மாரனேரி காவல் நிலைய தலைமை காவலர் கார்த்தி, சிவகாசி டவுன் காவல் நிலைய தனிப்பிரிவிற்கும், சிவகாசி கிழக்கு காவல் நிலைய தலைமை காவலர் பாலசுப்பிரமணியன் திருத்தங்கல்லுக்கும் மாற்றம் செய்யப்பட்டனர்.

Similar News

News October 16, 2025

விருதுநகர்:பட்டாசு தொழிலாளி பலி

image

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை முத்துச்சாமிபுரம் சேர்ந்தவர் காளிமுத்து, 26. பட்டாசு ஆலை தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு 8:00மணிக்கு எதிர்கோட்டையில் இருந்து இருசக்கர வாகனத்தில் (ஹெல்மெட் அணியவில்லை) ஊர் திரும்பினார்.எதிரில் சிவகாசியை சேர்ந்த காசிராஜன், 23 .ஒட்டி வந்த லோடு ஆட்டோ அவர் மீது மோதியது.சம்பவ இடத்தில் அவர் பலியானார்.ஆலங்குளம் போலீசார் விசாரிக்கின்றனர்.

News October 16, 2025

விருதுநகர்: ATM செல்பவர்கள் உஷார்

image

வத்ராப் கே.புதூரை சேர்ந்த அருண்குமார் நேற்று ஸ்ரீவி ATM மையத்தில் பணம் எடுக்க சென்றார். அப்போது அங்கிருந்த இளைஞர் கார்டு ரிவர்ஸ் ஆகிறது என்று கூறி அருண்குமாரின் கார்டை மாற்றி அதில் ரூ.40,000 எடுத்துச் சென்றது தெரியவந்தது. இதே போல் காரியாபட்டி பகுதிகளிலும் ATM கார்டை மாற்றி கொடுத்து பணத்தை மர்ம நபர் திருடி வரும் நிலையில் மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். SHARE IT

News October 16, 2025

சிவகாசியில் பட்டாசு கடைகள் மூடல்

image

சிவகாசி பகுதியில் சுமார் 4000 பட்டாசு கடைகள் மூலமாக தீபாவளிக்கான பட்டாசு விற்பனை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பட்டாசு விற்பனையில் முறையாக ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறதா? என்பது குறித்து ஏராளமான கடைகளில் வணிகவரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வரி முறையாக செலுத்தாத பட்டாசு கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதனிடையே சோதனைக்கு பயந்து பெரும்பாலான பட்டாசு கடைகள் மூடப்பட்டது.

error: Content is protected !!