News April 12, 2025
135 தலைமைக் காவலர்கள் பணியிட மாற்றம்

புதுச்சேரி காவல் துறையில் ஒரே இடத்தில் பணியாற்றும் போலீசார் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை பணியிடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி, புதுச்சேரி காவல் துறையில் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றி வரும் பெண் தலைமைக் காவலர்கள் உள்ளிட்ட 135 தலைமைக் காவலர்கள் நேற்று அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை காவல் துறை தலைமையக காவல் கண்காணிப்பாளர் சுபம் கோஷ் வெளியிட்டுள்ளார்.
Similar News
News April 15, 2025
புதுவை மக்களுக்கு மழை எச்சரிக்கை

தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில் கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில், நாளை(ஏப்.16) முதல் வரும் ஏப்.21ம் தேதி வரை ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் 30 முதல் 40 கி.மீ வேகத்தில் காற்று வீசும் எனவும் சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
News April 15, 2025
சென்னை உயர்நீதிமன்றத்தில் மாதம் ரூ.56,000 சம்பளத்தில் வேலை!

சென்னை உயர்நீதி மன்றத்தில் உதவியாளர், எழுத்தர் ( Perosnal Assitant, Personal Secretary, Clerk) உள்ளிட்ட பணிகளுக்கான 47 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு ரூ.56,000 முதல் மாத சம்பளமாக வழங்கப்பட உள்ளது. ஏதேனும் டிகிரி முடித்த 18-37 வயதுக்குட்பட்ட நபர்கள் <
News April 15, 2025
புதுவை: உதவியாளர் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு

புதுச்சேரி பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறையில் உதவியாளர் பணியிடத்திற்கான முதல் நிலைத் தேர்வு ஏப்.27 ஞாயிற்றுக்கிழமை, புதுச்சேரி காரைக்கால் மாஹே ஏனாம் பகுதிகளில் நடைபெற இருக்கின்றது. இத்தேர்வுக்கான அனுமதி சீட்டை தேர்வர்கள் http://recruitment.i-v.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து நாளை 16ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அரசு செயலர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.