News August 6, 2024

வங்கதேசத்தில் 13,000 இந்தியர்கள்: மத்திய அரசு

image

கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள வங்கதேசத்தில் 13,000 இந்தியர்கள் இன்னும் இருப்பதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது. வங்கதேச நிலவரம் குறித்து டெல்லியில் இன்று நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் பேசிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், வங்கதேசத்தில் உள்ள இந்தியர்களை உடனடியாக அழைத்துவர வேண்டிய தேவை ஏற்படவில்லை எனக் கூறினார். எனினும் அவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

Similar News

News March 26, 2026

EPS-ன் Makeup முகத்துக்கு பின்னால் அமித்ஷா: சிவசங்கர்

image

திமுகவை விமர்சிக்கும் தகுதி EPS-க்கு இல்லை என SS சிவசங்கர் கூறியுள்ளார். திமுக கூட்டணி கட்சிகள் அடிமையாக இருப்பதாக <<19478396>>EPS<<>> பேசியதை குறிப்பிட்ட அவர், திமுக கூட்டணி கட்சிகளுக்கு முழு சுதந்திரம் உள்ளது; அதனால்தான் பலகட்ட பேச்சுவார்த்தை நடந்தது என தெரிவித்தார். மேலும், EPS மேக் அப் போட்டு அறிவிப்புகளை வெளியிட்டாலும் அதற்கு பின்னால் இருப்பது அமித்ஷா என்றும் விமர்சித்துள்ளார். <<-se>>#TNElection2026<<>>

News March 26, 2026

இந்திய கப்பல்களுக்கு தடை இல்லை: ஈரான் அமைச்சர்

image

இந்தியாவுக்காக ஹார்முஸ் நீரிணை தொடர்ந்து திறந்தே இருக்கும் என ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி உறுதியளித்துள்ளார். ஈரானுடன் நட்பு நாடாக இருக்கும் இந்தியா, சீனா, ஈராக், பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கான கப்பல்கள் தொடர்ந்து இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்தியாவுக்கான எரிபொருள் தட்டுப்பாடு பிரச்னை நீங்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஏற்கெனவே 5 கப்பல்கள் இந்தியா நோக்கி வருகின்றன.

News March 26, 2026

மாணவி வன்கொடுமை… சர்ச்சையை கிளப்பிய SV சேகர்

image

வன்கொடுமைக்கு ஆளான தூத்துக்குடி மாணவி ஏன் புதருக்குள் போகவேண்டும் என எஸ்.வி.சேகர் கேள்வி எழுப்பியுள்ளார். குழந்தைகளை பெற்றோர் கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற அவர், பெண்கள் காட்டுக்குள் பாத்ரூம் போனால் கூட துணைக்கு யாராவது போகவேண்டும் என கூறியுள்ளார். மேலும், பீரோவை பூட்டாமல் சென்றுவிட்டு திருடன் திருடிவிட்டான் என்றால், சட்டம் – ஒழுங்கு சரியில்லை என கூற முடியுமா என சர்ச்சையாக பேசியுள்ளார்.

error: Content is protected !!