News March 23, 2024

 13 ஆயிரம் பேர் “ஆப்சென்ட்”

image

+2 பொதுத்தேர்வு நேற்றுடன் நிறைவு பெற்றுள்ளது. மதுரை மாவட்டத்தில் நடப்பாண்டு பொதுத்தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்த 7 லட்சத்து 72 ஆயிரத்து 200 பள்ளி மாணவர்கள், 21 ஆயிரத்து 875 தனித்தேர்வர்கள் என மொத்தம் 7 லட்சத்து 94 ஆயிரத்து 75 மாணவ-மாணவிகளில், சுமார் 13ஆயிரம் பேர் தேர்வு எழுத வரவில்லை என்று அரசு தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டைவிட ‘ஆப்சென்ட்’ எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது

Similar News

News April 17, 2025

மதுரை : கஞ்சா கடத்தியவருக்கு 12 ஆண்டு சிறை

image

திண்டுக்கல் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் காரில் சுமார் 150 கிலோ கஞ்சாவை கடந்த 2017 ஆம் ஆண்டு கடத்தி வந்ததாக மதுரை மாவட்ட போதை பொருள் தடுப்பு சிறப்பு பிரிவு போலீசார் சசிகுமார் என்பவரை  கைது செய்தனர். இந்த வழக்கில் அவருக்கு 12 ஆண்டுகள் சிறையும் ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்து  மதுரை மாவட்ட போதை பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

News April 17, 2025

மதுரையில் டூவீலர், கார் ஏலம்

image

மதுரையில் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட 305 பைக்கள், 11 மூன்று சக்கர வாகனங்கள், ஒரு கார் ஆயுதப்படையில் ஏப்.25ல் ஏலம் விடப்படுகிறது. விரும்புவோர் ஏப்.23 காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை முன்பணம் செலுத்தி ரசீது பெறவேண்டும். வாகனங்களை ஏப்.22, 23, 24ல் நேரில் பார்வையிடலாம். விவரங்களுக்கு   9498179176, 9498179294ல் தொடர்பு கொள்ளலாம். பைக் வாங்க நினைக்கு உங்க நண்பர்களுக்கு SHARE செய்து உதவவும்.

News April 17, 2025

பல கோடி ரூபாய் சொத்துக்காக தொழிலதிபர் கடத்தல்

image

மதுரை, பீபிகுளத்தைச் சேர்ந்தவர் சுந்தரராமன். மதுரையைச் சேர்ந்த சிலர், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சுந்தரராமனின் பல கோடி மதிப்புள்ள 6 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்தனர். இதையடுத்து ஐகோர்ட் மதுரை கிளையில், வழக்கு தொடர்ந்தார்.இந்நிலையில், இடப்பிரச்னை தொடர்பாக, ஏப்., 14ல் சுந்தரராமன் வீட்டிற்கு சிலர் வந்து பேச்சு நடத்தினர். ஆனால், சுந்தரராமன் ஒப்புக்கொள்ளாததால் அவர்கள் வந்த காரில் அவரை கடத்திச் சென்றனர்.

error: Content is protected !!