News March 6, 2025
மர்ம நோயால் 13 பேர் மரணம்

சத்தீஸ்கரின், சுக்மா மாவட்டத்தில் பரவி வரும் மர்ம நோயால் மக்கள் பீதியடைந்துள்ளனர். ஒரு மாதத்திற்குள் 13 பேர் மார்பு வலி மற்றும் இருமல் காரணமாக இறந்துள்ளனர். நோய் – அதன் காரணங்கள் குறித்த எந்த தகவலும் தெரியவில்லை. சுகாதாரத்துறை அதிகாரிகள் வீடு வீடாக கணக்கெடுப்பு நடத்தினர். பருவநிலை மாற்றம் மற்றும் காட்டில் நாள் முழுவதும் உழைத்த பிறகு நீரிழப்பு ஏற்படுவதால் இறப்பு நிகழ்வதாக அவர்கள் நம்புகிறார்கள்.
Similar News
News March 6, 2025
காதலை நிரூபிக்க இப்படியா… சிக்கிய இளசுகள்!

காதலுக்காக என்ன வேண்டுமானாலும் செய்ய இளைஞர்கள் தயாராக இருக்கிறார்கள். அப்படி ஒரு சம்பவம் ஹரியானாவில் நடந்துள்ளது. 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் காதலியின் சகோதரர் போல் ஆள்மாறாட்டம் செய்தவர்கள் உட்பட 34 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில், பெரும்பாலானவர்கள் காதலை நிரூபிக்க இவ்வாறு செய்ததாக வாக்குமூலம் கொடுத்துள்ளனர். நீங்க காதலுக்காக செஞ்சது என்னன்னு கமெண்ட் பண்ணுங்க!
News March 6, 2025
மீண்டும் கேப்டன் சுனில்

இந்திய கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் சுனில் சேத்ரி மீண்டும் தேசிய அணிக்காக விளையாட இருக்கிறார். 40 வயதாகும் இவர், கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் அறிவித்தார். இந்நிலையில், அவர் மீண்டும் விளையாடவிருப்பது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. இருப்பினும், அவர் ஓய்வில் இருந்து திரும்புவதற்கான காரணம் குறித்து எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.
News March 6, 2025
விவசாயிகளுக்கு GOOD NEWS.. கட்டணம் விலக்கு

மாநிலம் முழுவதும் மக்காச்சோளத்துக்கு 1% சந்தைக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. ஈரோடு, திருப்பூர், கோவை, நாகை, தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் மக்காச்சோளத்துக்கு 1% கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. இதனையடுத்து, கட்டணத்தை குறைக்க வேண்டும் என முதல்வரிடம் விவசாயிகள், வியாபாரிகள், பொதுமக்கள் கோரிக்கை வைத்ததன் அடிப்படையில், இந்த நடவடிக்கையை அரசு எடுத்துள்ளது.