News February 12, 2025
13 வயது சிறுமி திருமணமாகி கர்ப்பம் – 4 பேர் மீது வழக்கு

கடமலை, மயிலை BDO மலர்க்கொடிக்கு கிடைத்த தகவலின்படி சிறப்பாறை கிராமத்திற்கு சென்று விசாரித்தபோது, சந்திரசேகர் – சுவேதா தம்பதியரின் 13 வயது மகளுக்கு அதே ஊரைச் சேர்ந்த சடப்பாண்டி மகன் பிரவீன் குமாருடன் 7.11.24 அன்று குழந்தை திருமணம் நடைபெற்றது தெரிய வந்தது. தற்போது அக்குழந்தை 3 மாத கர்ப்பமாக உள்ளதால் 4 பேர் மீதும் BDO கொடுத்த புகாரின்பேரில் கடமலைக்குண்டு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
Similar News
News November 12, 2025
தேனியில் 20 பணியிடங்களுக்கு 6,324 விண்ணப்பங்கள்

தேனி: தமிழகத்தில் காலியாக உள்ள 1450 ஊராட்சி செயலாளர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என மாநில அரசு கடந்த அக்.,ல் அறிவிப்பு வெளியிட்டது. இதன் ஒரு பகுதியாக தேனி மாவட்டத்தில் 20 ஊராட்சி செயலாளர்கள் பணியிடங்கள் நிரப்ப அறிவிக்கப்பட்டிருந்தது. இப்பணியிடங்களுக்கு 6324 பேர் விண்ணப்பித்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சராசரியாக ஒரு பணியிடத்திற்கு 316 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
News November 12, 2025
தேனி: வாக்காளர் பெயர் சேர்க்க முக்கிய அறிவிப்பு!

தேனி மக்களே, வாக்காளர் படிவத் திருத்தங்களுக்காக வீடு வீடாக SIR படிவம் உங்க பகுதில வழங்கும் போது நீங்க வீட்ல இல்லையா? உங்க ஓட்டு பறிபோயிடும்ன்னு கவலையா? அதற்கு ஒரு வழி இருக்கு. இங்கு <
News November 12, 2025
தேனி: மனைவியை துன்புறுத்திய கணவர் மீது வழக்கு

போடி அருகே சிலமலை பகுதியை சேர்ந்தவர் அருள்கனி (22). இவரது கணவர் காளிமுத்து (28). இந்த தம்பதியருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் காளிமுத்து தினமும் மது அருந்திவிட்டு, குடும்ப செலவிற்கு பணம் தராமல் மனைவி, குழந்தைகளை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். இது குறித்து அருள்கனி அளித்த புகாரில் போடி அனைத்து மகளிர் போலீசார் காளிமுத்து மீது நேற்று (நவ.11) வழக்கு பதிவு செய்துள்ளனர்.


