News February 14, 2025
13 உதவி ஆய்வாளா்கள் திடீர் பணியிட மாற்றம்

புதுச்சேரியில் பல்வேறு போலீஸ் ஸ்டேஷன்களில் பணியாற்றிய 13 உதவி ஆய்வாளா்கள் நேற்று திடீர் பணியிடமாற்றம் செய்யப்பட்டனர். மேட்டுப்பாளையத்தில் பணியாற்றிய அருள், உருளையன் பேட்டைக்கும், திருநள்ளாரில் பணியாற்றிய லெனின் ராஜீ மாகேவிற்கும், காரைக்கால் டவுனில் பணியாற்றிய வேல்முருகன் மாகி பண்டக்கலுக்கும், மாற்றப்பட்டனர். இதற்கான உத்தரவை புதுவை தலைமைக் காவல் கண்காணிப்பாளா் சுபம் கோஷ் உத்தரவிட்டுள்ளாா்.
Similar News
News September 1, 2025
புதுச்சேரி: ரூ.2,15,900 சம்பளம்.. ஜிப்மரில் வேலை!

புதுச்சேரி ஜிப்மரில் காலியாக உள்ள Registrar, Computer Programmer பதிவிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு மாதம் ரூ.44,900 முதல் ரூ.2,15,900 வரை சம்பளம் வழங்கப்படும். ஏதேனும் டிகிரி முடித்தவர்கள் வருகிற செப்.29ம் தேதிக்குள் <
News September 1, 2025
புதுச்சேரி: தெருநாய்கள் அச்சுறுத்தலா? உடனே புகார்

புதுச்சேரியில் அண்மைக்காலமாக தெரு நாய்கள் தொல்லை அதிகரித்துக் காணப்படுகிறது. மேலும், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தெரு நாய்கள் கடிக்கு ஆளாகின்றனர். சில நேரங்களின் உயிரிழப்பு கூட ஏற்படுகிறது. இனி தெருக்களில் கூட்டம் கூட்டமாகத் திரியும் தெரு நாய்களை கண்டு அச்சமடையவோ, கவலையோ வேண்டாம். உங்கள் பகுதியில் தெரு நாய்கள் தொடர்பான புகார்களை தெரிவிக்க 0413-2227518 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். SHARE IT
News September 1, 2025
காரைக்காலில் புதிய துணை மாவட்ட ஆட்சியர் பொறுப்பேற்பு

காரைக்கால் மாவட்டத்தின் புதிய துணை ஆட்சியராக பூஜா அவர்களை நியமித்து உத்தரவிட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து இன்று துணை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காரைக்கால் துணை மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுக் கொண்டார்கள். புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட துணை மாவட்ட ஆட்சியர் பூஜா அவர்களுக்கு அரசு அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.