News April 27, 2025
13 இடங்களில் ஸ்பா மூலம் பாலியல் தொழில்

அண்ணாநகரில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஸ்பா என்ற பெயரில் வெளிமாநில பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்திய மேனேஜர் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். ஸ்பா சென்டர் உரிமையாளர் ஹேமா ஜுலியோ (50) தலைமறைவாகிவிட்டர். போலீசார் அவரை தேடி வந்த நிலையில், மயிலாப்பூரில் கைது செய்யப்பட்டார். இவருக்கு சென்னை முழுவதும் 13+ ஸ்பா சென்டர்கள் உள்ளன. அதில் பாலியல் தொழில் நடத்தி வந்தது தற்போது தெரியவந்துள்ளது.
Similar News
News April 28, 2025
ரயில்களை கவிழ்க்க தொடரும் சதி

திருவாலங்காடு அருகே கடந்த 25ஆம் தேதி நட்டு, போல்டை கழற்றி ரயிலை கவிழ்க்க சதி திட்டம் தீட்டப்பட்டது. அது முறியடிக்கப்பட்ட நிலையில், நேற்று (ஏப்ரல் 27) அரக்கோணம் தண்டவாளத்தில் 5 இடங்களில் கற்கள் வைக்கப்பட்டிருந்தது. நேற்று முந்தினம் (ஏப்ரல் 26) அம்பத்துார் – பட்டரைவாக்கம் ரயில் நிலையங்களுக்கு இடையே கற்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. மீண்டும் சதி திட்டம் தீட்டப்பட்டதா? என போலீசார் விசாரிக்கின்றனர்.
News April 28, 2025
சென்னையில் மழைக்கு வாய்ப்பு

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று (ஏப்ரல் 28) வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் அலெர்ட் கொடுத்துள்ளது. அதிகபட்சமாக 36 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சமாக 28 -29 டிகிரி செல்சியஸ் இருக்கக்கூடும். எனவே, பணிக்கு செல்வோர் குடை அல்லது ரெயின் கோர்ட்டை மறக்காமல் எடுத்துச் செல்லுங்கள். ஷேர் செய்யுங்கள்
News April 28, 2025
சென்னை இரவு ரோந்துப் பணி போலீசாரின் விவரம்

சென்னை போலீசாரின் “Knights on Night Rounds” (27.04.2025) இன்று இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை செயல்படுகிறது. ஒவ்வொரு பகுதியிலும் அதிகாரிகள் வாகனத்தில் ரோந்துப் பணியில் ஈடுபடுவர். அவசர காலங்களில் தொடர்பு கொள்ள நேரடி மொபைல் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அசம்பாவிதம் நிகழ்ந்தால் மேலே உள்ள எண்களை அழைக்கலாம். *இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கட்டாயம் உதவும், பகிரவும்*