News March 23, 2024

 13 ஆயிரம் பேர் “ஆப்சென்ட்”

image

+2 பொதுத்தேர்வு நேற்றுடன் நிறைவு பெற்றுள்ளது. மதுரை மாவட்டத்தில் நடப்பாண்டு பொதுத்தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்த 7 லட்சத்து 72 ஆயிரத்து 200 பள்ளி மாணவர்கள், 21 ஆயிரத்து 875 தனித்தேர்வர்கள் என மொத்தம் 7 லட்சத்து 94 ஆயிரத்து 75 மாணவ-மாணவிகளில், சுமார் 13ஆயிரம் பேர் தேர்வு எழுத வரவில்லை என்று அரசு தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டைவிட ‘ஆப்சென்ட்’ எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது

Similar News

News April 19, 2025

போலீஸ் எஸ்.ஐ., தேர்வுக்கு இலவச பயிற்சி

image

மதுரை, மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் போலீஸ் எஸ்-ஐ தேர்வுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் 23ம் தேதி முதல் துவங்கப்படவுள்ளது. விரும்புவோர் ஆதார் அட்டை மற்றும் 2 பாஸ்போர்ட் சைஸ் போட்டோவுடன் வேலைவாய்ப்பு மையத்தை நேரில் அனுகவும். தங்களது சுய விவரங்கள் பதிவேற்றம் செய்து பாடக்குறிப்புகளை இந்த <>லிங்கில் <<>> எடுக்கலாம். விவரங்களுக்கு 9698-36868 அழைக்கலாம். போலீசாக விரும்புவோருக்கு SHARE செய்து உதவவும்.

News April 19, 2025

கடத்தப்பட்ட தொழிலதிபர் ! சினிமா பாணியில் சேஸிங் செய்து மீட்பு…

image

மதுரையில் இடத் தகராறு காரணமாகக் கடத்தப்பட்ட தொழிலதிபர் கருமுத்து சுந்தரம் மீட்கப்பட்டார். பீ.பீ குளத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஏப்.6 மர்மநபர்களால் கடத்தப்பட்டார். இந்நிலையில் இன்று மதுரை, பாண்டி கோயில் பாலம் அருகே போலீசார் விரட்டி பிடித்து 2 பேரைக் கைது செய்தனர். கடத்தல் தொடர்பாக ஏற்கெனவே 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது மேலும் இருவர் கைது.

News April 19, 2025

லாரியில் சிக்கி 5 கி.மீ., இழுத்து செல்லப்பட்ட இளைஞரின் உடல்

image

மதுரை, வாடிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சூரியபிரகாஷ் 30. இவருக்கு மனைவி பிரியா 25, 2 மகள்கள் உள்ளனர். நேற்று அதிகாலை வாடிப்பட்டியிலிருந்து டூவீலரில் சென்றபோது ஆண்டிபட்டி பங்களா அருகே மதுரை நோக்கி சென்ற லாரியின் பின் சக்கரத்தில் மோதி டூவீலருடன் சிக்கி உடல் 5 கி.மீ. வரை இழுத்து செல்லப்பட்டது. லாரியில் உடல் சிக்கி இருப்பதை கண்ட சிலர் டூவீலரில் சென்று தகவல் தெரிவித்த பின்பு தான் டிரைவருக்கு தெரியவந்தது.

error: Content is protected !!