News April 4, 2025

1,299 SI பணியிடங்கள்: 7ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

image

தமிழ்நாட்டில் உள்ள 1,299 எஸ்.ஐ. பணியிடங்களுக்கான தேர்வுக்கு வரும் 7ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாலுகாவில் 933 காலிப் பணியிடங்களும். ஆயுதப்படையில் 366 காலிப் பணியிடங்களும் உள்ளன. ஏதாவது ஒரு இளங்கலை பட்டம் பெற்றவர்கள் வரும் மே 3ஆம் தேதி வரை இந்த <>லிங்கை க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். வாரிசுதாரர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு 10% ஒதுக்கீடு உள்ளது. ஷேர் செய்யுங்கள்

Similar News

News December 28, 2025

தி.மலை: மாமியார் வீட்டிற்கு சென்ற மருமகன் மரம் சாவு

image

செய்யாறு அருகே கீழ்நேத்தப்பாக்கத்தைச் சேர்ந்த ராஜா (22), 8மாதங்களுக்கு முன் காதல் திருமணம் செய்தவர். கடந்த 21-ஆம் தேதி மாமியார் வீட்டிற்குச் சென்ற ராஜா, பின்னர் மாயமானார். இந்நிலையில், பாண்டியம்பாக்கம் – சித்தாத்தூர் சாலை பாலத்தின் அடியில் அவர் பலத்த காயங்களுடன் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். தூசி போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.இது கொலையா, தற்கொலையா என்று போலீசார் விசாரணை.

News December 28, 2025

தி.மலை: வெவ்வேறு விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே பலி!

image

திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் அருகே ராமகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த தேவேந்திரன் (45), வயலில் டிராக்டர் ஓட்டியபோது அது கவிழ்ந்ததில் சேற்றில் சிக்கி மூச்சுத்திணறி உயிரிழந்தார். மோரணம் போலீசார் விசாரிக்கின்றனர். மேலும் வடமணப்பாக்கத்தைச் சேர்ந்த ராம்குமார் (25), வேலைக்குச் சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்தார். இதுகுறித்து பிரம்மதேசம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 28, 2025

தித்திக்கும் திட்டங்கள் என்ற புத்தகத்தை வெளியிட்ட முதல்வர்,

image

திருவண்ணாமலை மாவட்டம், மலப்பாம்பாடி கலைஞர் திடலில் நடைபெற்ற அரசு விழாவில், “திராவிட மாடல் ஆட்சியின் தித்திக்கும் திட்டங்கள்” என்ற புத்தகத்தை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வெளியிட்டார். உடன் அமைச்சர்கள் வேலு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, துணை சபாநாயகர் பிச்சாண்டி, கலெக்டர் தர்ப்பகராஜ், எம்பிகள் அண்ணாதுரை, தரணிவேந்தன் எம்.எல்.ஏக்கள் மற்றும் துறையை சார்ந்த அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.

error: Content is protected !!