News April 17, 2024
தமிழ்நாட்டில் இதுவரை ரூ.1,297 கோடி பறிமுதல்

தமிழ்நாட்டில் இதுவரை ₹1,297 கோடி மதிப்பிலான பணம், தங்கம், வெள்ளி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். மேலும், 39 தொகுதிகளில் 8,400 தபால் வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிகப்பட்சமாகத் திருச்சியில் 3,369 தபால் வாக்குகள் பதிவாகியுள்ளது. தேர்தல் பணியில் ஈடுபடுவோர் நாளை (ஏப்.18) வரை தபால் வாக்குகளைச் செலுத்தலாம் எனவும் அவர் தெரிவித்தார்.
Similar News
News April 11, 2026
பாகிஸ்தான் புறப்பட்ட அமெரிக்க துணை அதிபர்

ஈரானுடனான அமைதிப் பேச்சு வார்த்தைக்காக அமெரிக்க துணை அதிபர் JD வான்ஸ் பாகிஸ்தான் புறப்பட்டார். அமெரிக்க குழுவுக்கு JD வான்ஸும் ஈரான் குழுவிற்கு ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சியும் தலைமை தாங்குகின்றனர். இதில் என்ன முடிவு எட்டப்படும் என்பதை அறிய உலக நாடுகள் அனைத்தும் ஆவலுடன் காத்திருக்கின்றன. மேலும், பேச்சுவார்த்தையை முன்னிட்டு இஸ்லாமாபாத்தில் 2 நாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
News April 10, 2026
BREAKING: விஜய்க்கு ரஜினி ஆதரவு

ஜன நாயகன் திரைப்படம் இணையத்தில் யாராலோ வெளியிடப்பட்டிருப்பது அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது என ரஜினி தெரிவித்துள்ளார். மேலும், திரை அமைப்புகள் இதற்கு எதிராகக் குரல் எழுப்பி, அரசு இதைச் செய்தவர்களைக் கண்டுபிடித்து கடுமையான தண்டனை அளிக்க வேண்டும் எனவும் தனது X பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
News April 10, 2026
உண்மையான நட்பு எங்கே?

நமக்கு தெரிஞ்சவங்க எல்லாம் நம் `நண்பர்கள்’ ஆகமாட்டாங்க. `நண்பேண்டா’ என டயலாக் பேசினாலும், உள்ளுக்குள் அந்த உணர்வு இருக்கணும். ஆனால், இதெல்லாம் இந்த காலத்தில் கஷ்டம் தான். நுகர்வு கலாசாரம், அதுக்காக பணத்தை தேடி ஓடும் நிலையும், நவீன டெக்னாலஜியும் மனுஷங்கள நெருங்கிப் பழகவிடாம தடுக்கின்றன. அப்படி பழகினாலும் அது மேம்போக்கா, பொழுதை போக்கும் நட்பா தான் இருக்கும். நீங்க எப்படி ஃபீல் பண்றீங்க?


