News April 17, 2024

தமிழ்நாட்டில் இதுவரை ரூ.1,297 கோடி பறிமுதல்

image

தமிழ்நாட்டில் இதுவரை ₹1,297 கோடி மதிப்பிலான பணம், தங்கம், வெள்ளி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். மேலும், 39 தொகுதிகளில் 8,400 தபால் வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிகப்பட்சமாகத் திருச்சியில் 3,369 தபால் வாக்குகள் பதிவாகியுள்ளது. தேர்தல் பணியில் ஈடுபடுவோர் நாளை (ஏப்.18) வரை தபால் வாக்குகளைச் செலுத்தலாம் எனவும் அவர் தெரிவித்தார்.

Similar News

News August 22, 2025

விருத்தாசலத்தில் பிரேமலதா விஜயகாந்த் போட்டியா?

image

விஜயகாந்த் பாணியில் விருத்தாசலம் தொகுதியில் பிரேமலதா களமிறங்க உள்ளதாக பேச்சு எழுந்த நிலையில், புதிய விளக்கத்தை அளித்துள்ளார். இதுகுறித்து பேசிய பிரேமலதா, இன்னும் கூட்டணி முடிவாகவில்லை, கூட்டணி முடிந்த பிறகு எந்தெந்த தொகுதிகள், யார் யார் போட்டி என்பதை அறிவிப்போம் என்றார். மேலும், ஜன.9-ம் தேதி கடலூரில் நடைபெறவுள்ள மாநாட்டில்தான் தேமுதிக கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் எனவும் திட்டவட்டமாக கூறினார்.

News August 22, 2025

முடிவுக்கு வரும் இஸ்ரேல் போர்? நெதன்யாகு உத்தரவு

image

இஸ்ரேல் – ஹமாஸ் போரால் காசா பகுதியில் மக்கள் பெருந்துயரத்தில் உள்ளனர். இந்நிலையில், போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட இஸ்ரேல் PM பெஞ்சமின் நெதன்யாகு உத்தரவிட்டுள்ளார். அனைத்து பணயக் கைதிகளையும் விடுவிக்க இருப்பதாகவும் அவர் வெளியிட்ட வீடியோவில் குறிப்பிட்டுள்ளார். அதேநேரம் இஸ்ரேல், காசா நகரத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான திட்டங்களை செயல்படுத்தும் என்றார்.

News August 22, 2025

உங்க பணம் Dream 11 அக்கவுண்ட்டில் இருந்தால்…

image

ஆன்லைன் <<17474129>>கேமிங் <<>>சீர்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதை அடுத்து, Dream 11 தனது அனைத்து பயன்பாடுகளையும் நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது. இப்போது பணம் Dream 11 அக்கவுண்டில் இருந்தால், என்ன செய்வது என பலரும் தவித்து வரும் நிலையில், அதுகுறித்து Dream 11 விளக்கமளித்துள்ளது. அக்கவுண்டில் எவ்வளவு பணம் உள்ளதோ, அதனை அப்படியே வங்கி கணக்குக்கு மாற்றிக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT.

error: Content is protected !!