News May 10, 2024

129 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி

image

தமிழக முழுவதும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 94.35% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 30 அரசு பள்ளிகள் 100% தேர்ச்சியும் அரசு உதவி பெறும் பள்ளிகள் 35 ம் தனியார் பள்ளிகள் 64 என மொத்தம் 129 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.

Similar News

News July 11, 2025

தூத்துக்குடி வேலைவாய்ப்பு முகாம்.. சீக்கிரம் பதிவு பண்ணுங்க

image

தூத்துக்குடியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் ஜூலை 19ம் தேதி St மேரிஸ் கல்லூரியில் நடைபெற உள்ளது. 200 நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன. இதில் கலந்து கொள்ளும் நபர்கள் ஜூலை 18க்குள் பெயர், படிப்பு, வாட்ஸ்அப் எண், இ-மெயில், முகவரி உள்ளிட்ட தகவல்களை இந்த <>லிங்கில் கிளிக்<<>> செய்து பதிவு செய்துகொள்ள வேண்டும். 8 முதல் ITI, டிப்ளமோ, டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். வேலை தேடுவோருக்கு உடனே SHARE பண்ணுங்க.

News July 10, 2025

தூத்துக்குடி: இன்று இரவு ரோந்து போலீஸ் விவரம்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விவரங்களை கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. இந்த ரோந்துபணிகளை விளாத்திக்குளம் DSP அசோகன் மேற்கொள்கிறார். அவசர காலங்களில் பொதுமக்கள் 100 அல்லது தூத்துக்குடி மாவட்ட ஹலோ போலீஸ் எண்ணான 9514144100 ஐ தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.

News July 10, 2025

தூத்துக்குடி: குரூப் 4 தேர்வு: 37,005 பேர் எழுதுகின்றனர்

image

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) சார்பில் நாளை மறுநாள் (ஜூலை 12) அன்று குரூப் 4 தேர்வு நடைபெறவுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி, ஏரல், எட்டையாபுரம் உள்ளிட்ட 10 வட்டங்களில் 127 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் 37,005 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர். முறைகேடுகளைத் தடுக்க 31 பறக்கும் படைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் இளம் பகவத் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!