News January 3, 2025

வங்கியில் 1267 பணியிடங்கள்: ₹63,840 வரை சம்பளம்

image

பாங்க் ஆஃப் பரோடாவில் சிறப்பு அதிகாரிகள், தகவல் தொழில்நுட்பம் என 1267 காலியிடங்கள் உள்ளது. இதற்கு ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் மூலமாக 17.01.2025 இரவு மணி 11.59 வரை விண்ணப்பங்களை அனுப்பலாம். 24 வயதில் இருந்து 42 வயது மிகாமல் இருக்க வேண்டும். சம்பளம் ₹36,000 – ₹63,840 வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்புவோர் <>இந்த லிங்கை கிளிக் செய்யவும்<<>>.

Similar News

News September 15, 2025

இட்லிக்கு ஏங்கினாரா தனுஷ்? உண்மை என்ன?

image

இட்லி சாப்பிடுவதே சிறுவயதில் தனக்கு பெருங்கனவு என்று <<17712349>>தனுஷ் கூறியிருந்தார்<<>>. ஆனால், ஒரு இயக்குநரின் மகனுக்கு இந்த நிலையா? என்ற கேள்வி பலருக்கும் எழுந்தது. இதற்கான பதில், சென்னை வந்த தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா, மில்லில் வேலை பார்த்துள்ளார். அப்போது, ₹1-ஐ மிச்சப்படுத்த தினமும் 7 கி.மீ., நடந்து போயுள்ளார். விசுவிடம் கஸ்தூரி உதவி இயக்குநராக இருந்தபோதும் சிறிய வீட்டிலேயே இருந்தனராம்.

News September 15, 2025

₹3,000 கோடி.. மகளிருக்கு நாளை மகிழ்ச்சியான அறிவிப்பு

image

மகளிர் உரிமைத் தொகை ₹1,000 இன்று டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், பெண்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியாக, தமிழகம் முழுவதுமுள்ள மகளிர் சுய உதவி குழுக்களுக்கு நாளை(செப்.16) ₹3,000 கோடி கடன் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மகளிருக்கான கடனுதவி திட்டத்தை சேலம் கருப்பூரில் DCM உதயநிதி ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கவுள்ளார். இதன்மூலம், தமிழகம் முழுவதும் 2.55 கோடி பெண்கள் பயன்பெறுவர். SHARE IT.

News September 15, 2025

எங்களுக்கு இதெல்லாம் சாதாரண விஷயம்: பிரேமலதா

image

திரையுலகில் இருந்து வந்த விஜய்யை பார்க்க ரசிகர்கள் கூடுவது இயல்பான ஒன்றுதான்; நாங்கள் விஜயகாந்தை பார்த்து வளர்ந்தவர்கள். எங்களுக்கு இதெல்லாம் சாதாரண விஷயம் என்று பிரேமலதா தெரிவித்துள்ளார். சரியான திட்டமிடல் இல்லாமல் விஜய் பரப்புரை செய்ததாக கூறிய அவர், விஜயகாந்தை மற்றவர்களுடன் (விஜய்) ஒப்பிட்டு பேசுவது தவறு என்றும், தொண்டர்களின் விருப்பப்படி கூட்டணி அமையும் எனவும் தெரிவித்தார்.

error: Content is protected !!