News June 19, 2024

பெண்கள் துன்புறுத்தல் தொடர்பாக 12,600 புகார்கள்

image

பெண்கள் துன்புறுத்தப்பட்டது தொடர்பாக 2024ஆம் ஆண்டில் இதுவரை தேசிய மகளிர் ஆணையத்துக்கு 12,600 புகார்கள் வந்துள்ளன. அதில், அதிகபட்சமாக உத்தர பிரதேசத்தில் இருந்து 6,492 புகார்கள் வந்துள்ளன. டெல்லியில் 1,119, தமிழகத்தில் இருந்து 304 புகார்கள் வந்துள்ளன. மொத்த புகார்களில் 3,567 புகார்கள் கண்ணியக் குறைவாக நடத்தப்பட்டது தொடர்பானவை, 1,963 புகார்கள் வரதட்சணை கொடுமை தொடர்பானவை ஆகும்.

Similar News

News April 5, 2026

நாளை பள்ளிகளுக்கு விடுமுறை.. அறிவிப்பு வந்தது

image

புதுக்கோட்டை, நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு நாளை(ஏப்.6) அந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மாநில அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் இயங்காது. அதேநேரம், 1 – 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை நடைபெறவிருந்த முழு ஆண்டுத் தேர்வு வரும் 10-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.

News April 5, 2026

பரிசாக வந்த வேல்.. ரிட்டன் கொடுத்த உதயநிதி

image

ராமநாதபுரத்தில் திமுக வேட்பாளரை ஆதரித்து உதயநிதி நேற்று இரவு பிரசாரம் செய்தார். அப்போது, திமுக நிர்வாகிகள் பலர் உதயநிதிக்கு பரிசுப்பொருள்களை வழங்கினர். அதில் ஒருவர் உதயநிதிக்கு வேல் வழங்கியபோது, அதை வாங்கிய சில நொடிகளில் அவரிடமே திரும்ப கொடுத்துவிட்டார். ஆனால், மற்றொரு நிர்வாகி புத்தர் சிலையை வழங்கியதும், அதனை வாங்கி வைத்துக்கொண்டார். இது தற்போது சர்ச்சையாக மாறியுள்ளது. <<-se>>#TNElection2026<<>>

News April 5, 2026

காமராஜரை கொலை செய்ய முயன்றனர்: ஸ்டாலின் பரபரப்பு

image

காமராஜரை டெல்லியில் உள்ள வீட்டில் வைத்து சங்கிக் கூட்டம் கொலை செய்ய முயன்றதாக ஸ்டாலின் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். விருதுநகர் தேர்தல் பரப்புரையில் பேசிய அவர், காமராஜர் மறைவின் போது அவரது மகன் போல் நின்று இறுதி மரியாதை செலுத்தியவர் கருணாநிதி எனவும் கூறியுள்ளார். முன்னதாக, காமராஜர் மறைந்த பிறகு அவருக்கு மெரினாவில் இடம் கொடுக்க திமுக மறுத்துவிட்டதாக EPS கூறியிருந்தார். <<-se>>#TNElection2026<<>>

error: Content is protected !!