News April 15, 2025
125 ஆண்டு பழமையான ஒப்பந்தம்: சிக்கிய சோக்ஷி

வங்கி மோசடியில் ஈடுபட்ட மெகுல் சோக்ஷியை கைது செய்ததற்கு 125 ஆண்டு பழமையான ஒப்பந்தமே காரணமாம். சுதந்திரத்திற்கு
முன்பாக இந்தியாவை ஆண்ட பிரிட்டன் 1907 ல் இரு நாட்டுக்கும் இடையே குற்றவாளிகளை நாடு கடத்தும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. அதில், பணமோசடியில் சிக்குவோரை பரஸ்பரம் நாடு கடத்த ஒப்புக் கொள்ளப்பட்டது. அது தான் வங்கியை மோசடி செய்த சோக்ஷியை பிடிக்க உதவியிருக்கிறது.
Similar News
News April 18, 2025
வங்கதேசத்தின் மூக்கை உடைத்த இந்தியா!

வக்ஃப் சட்டத்துக்கு எதிராக மே.வங்கத்தில் நடந்த போராட்டம் வன்முறையாக மாறியது. கடைகள், வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டதால் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மைனாரிட்டி முஸ்லிம்களை காக்க இந்தியா நடவடிக்கை எடுக்குமாறு வங்கதேசம் வலியுறுத்தியது. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள இந்தியா, முதலில் அங்குள்ள மைனாரிட்டிகளுக்கு பாதுகாப்பு கொடுங்கள், தேவையின்றி மூக்கை நுழைக்காதீர்கள் என பதிலடி தந்துள்ளது.
News April 18, 2025
உடல்நிலை பாதிப்பு.. நஸ்ரியா உருக்கமான பதிவு

தாம் மிகவும் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருப்பதாக நஸ்ரியா உருக்கமாக சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பொது நிகழ்ச்சிகளில் இருந்தும், சமூகவலைதளத்தில் இருந்தும் நீண்ட நாள்களாக அவர் விலகியுள்ளார். இந்நிலையில் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ள நஸ்ரியா, தனது உடல்நிலை, மனநிலை பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், அதிலிருந்து குணமாக மேலும் சில நாள்கள் ஆகும் என்றும் தெரிவித்துள்ளார். மிஸ் யூ நஸ்ரியா !
News April 18, 2025
கல்லூரி மாணவர்கள் மோதலை தடுக்க சிறப்புக்குழு

தமிழகத்தில் கல்லூரி மாணவர்களின் மோதலை தடுக்க சிறப்புக்குழு அமைக்குமாறு அரசுக்கு ஐகோர்ட் பரிந்துரைத்துள்ளது. பச்சையப்பன், மாநிலக் கல்லூரி மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்ததையடுத்து, இந்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. பல தலைவர்கள் படித்த கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள், மோதலில் ஈடுபடுவது வேதனையளிப்பதாக ஐகோர்ட் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.