News March 10, 2025
மணிக்கு 12,144 கி.மீ. வேகம்.. இந்திய பிரம்மாஸ்திரம் தயார்

மணிக்கு 12,144 கி.மீ. வேகத்தில் பாயும் ஏவுகணையை இந்தியா உருவாக்கியுள்ளது. LRAShM என்ற அந்த ஏவுகணை, 1,500 கி.மீ. தூரம் வரை பாயும். இது கப்பல் தகர்ப்பு ஏவுகணை. ஒலியின் வேகத்தை விட 10 மடங்கு வேகமுடையது. 3.37 கி.மீ. தூரத்தை 1 விநாடியில் கடக்கும். இந்த வேகத்தில் பயணித்தால் டெல்லி- வாஷிங்டனுக்கு ஒரு மணி நேரமும், மும்பையில் இருந்து கராச்சிக்கு 5 நிமிடமுமே ஆகும். USA, சீனாவிடமே இத்தகைய ஏவுகணை உள்ளது.
Similar News
News March 10, 2025
REWIND: கோவிட் பெருந்தொற்று அறிவிக்கப்பட்ட நாள்

2020ஆம் ஆண்டு இதே நாளில்தான் கொரொனாவை பெருந்தொற்றாக (pandemic) உலக சுகாதார மையம் அறிவித்தது. 2019 டிசம்பர் மாதத்தில் சீனாவில் முதல் கோவிட் தொற்று கண்டறியப்பட்டது. அது, 2020 ஜனவரி மாதத்தில் உலகம் முழுவதும் பரவியது. பின்னர், 2020 மார்ச் மாதத்தில் பெருந்தொற்றாக அறிவிக்கப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பின்னர் நடந்த லாக்-டவுன், மாஸ்க், தடுப்பூசி, குவாரண்டைன் கதைகள் எல்லாம் உங்களுக்கே தெரியும்.
News March 10, 2025
ஹாரி பாட்டர் பட நடிகர் மரணம்

ஹாலிவுட்டில் வசூலை குவித்த படங்களில் ஹாரிபாட்டர் படங்களும் ஆகும். அதில் 2001இல் வெளியான ‘ஹாரிபாட்டர் அன்ட் தி பிளாசபர் ஸ்டோன்’ படத்தில் Ghost The Fat Friar கதாபாத்திரத்தில் நடித்தவர் சைமன் பிசர் (63) ஆவார். அவர் நேற்று மதியம் காலமானதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மரணத்திற்கான காரணம் அறிவிக்கப்படவில்லை. சைமன் பிசர் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
News March 10, 2025
ஜெயலலிதா இன்று இருந்திருந்தால்?

ஜெயலலிதா உயிரோடு இருக்கையில், அதிமுகவினர் தங்களுக்குள் ஒருவரையொருவர் விமர்சித்தது இல்லை. கூட்டணி குறித்து பேட்டி அளித்தது இல்லை. ஆனால், அண்மையில் ராஜேந்திர பாலாஜி, மா.பா. பாண்டியராஜன் மோதல் விவகாரம், கூட்டணி குறித்த மூத்த தலைவர்கள் பேட்டி உள்ளிட்டவை தொண்டர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜெயலலிதா மட்டும் இன்று இருந்திருந்தால், இதுபோல நடக்குமா? என அவர்கள் பேசி வருகின்றனர்.