News August 20, 2025

121 கிலோ தங்கம்… கடவுளுக்கு காணிக்கை கொடுத்த பக்தர்

image

திருப்பதி ஏழுமலையானுக்கு ₹140 கோடி மதிப்பு கொண்ட 121 கிலோ தங்கத்தை பக்தர் ஒருவர் காணிக்கையாக வழங்கியுள்ளார். ஏழுமலையானை வேண்டிக் கொண்டு தொழில் தொடங்கிய இவர், கோடிக்கணக்கில் லாபம் சம்பாதித்துள்ளார். இதையடுத்து நேர்த்திக்கடன் செலுத்தும் விதமாக, 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக கொடுத்திருக்கிறார். பெயர் சொல்ல விரும்பாத அந்த பக்தருக்கு சொந்தமான நிறுவனத்தின் 60% பங்குகள் மட்டும் ரூ.6,000 கோடியாம்.

Similar News

News January 26, 2026

தேமுதிகவுடன் மீண்டும் கூட்டணி பேச்சுவார்த்தை

image

கூட்டணியை இதுவரை இறுதி செய்யாத தேமுதிகவுடன் மீண்டும் கூட்டணி பேச்சுவார்த்தையை அதிமுக – பாஜக தரப்பு தொடங்கியிருக்கிறது. குடியரசு தினத்தையொட்டி, கவர்னர் அளித்த தேநீர் விருந்தில் பங்கேற்ற தேமுதிக பொருளாளர் எல்.கே.சதீஷுடன் நயினார் நாகேந்திரனும், அதிமுக தலைவர்களும் 10 நிமிடங்களுக்கு மேல் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், அதில் தொகுதி பங்கீடு குறித்து பேசப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

News January 26, 2026

கனமழை: நாளை பள்ளிகளுக்கு விடுமுறையா?

image

பல மாவட்டங்களில் தற்போது மழை பெய்துவருகிறது. இந்நிலையில், இரவில் சென்னை, திருவள்ளூர், செங்கை, காஞ்சி, கோவை, திருப்பூர், வேலூர், தி.மலை, நீலகிரி, மதுரை, ராணிப்பேட்டையில் மழை நீடிக்கும் என IMD கணித்துள்ளது. இதனால், நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்குமாறு பெற்றோர்கள், மாணவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். காலையும் மழை தொடர்ந்தால், விடுமுறை குறித்து மாவட்ட நிர்வாகம் அறிவிக்க வாய்ப்புள்ளது.

News January 26, 2026

உங்கள் உணவு இப்படியா வருகிறது?

image

உணவு டெலிவரிக்கு பயன்படும் கருப்பு பிளாஸ்டிக்கில் உள்ள ரசாயனங்களால் இதய-ரத்த நாள நோய்கள், நீரிழிவு, மலட்டுத்தன்மை பாதிப்புகள் ஏற்படும் ஆபத்து அதிகம் என்கின்றனர் டாக்டர்கள். மேலும், அதனால் ஹார்மோன் குறுக்கீடு, நரம்பு பாதிப்புகள், இதிலுள்ள மைக்ரோ பிளாஸ்டிக்கால் செல்களுக்கு சேதம் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படலாம். ஆகவே, உணவுகளை வைக்க ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் போன்ற உலோகப் பாத்திரங்களே சிறந்தவை.. SHARE IT

error: Content is protected !!