News March 24, 2024
12 ஆண்டுகளுக்கு பிறகு மஹா கும்பாபிஷேகம்

செங்கல்பட்டு புதிய பேருந்து நிலைய அருகே உள்ள சின்ன மேலமையூர் ஜிஎஸ்டி சாலையில் அமைந்துள்ள அருள்மிகு சின்ன முத்துமாரியம்மன் கோவிலில் இன்று (மார்ச்-24) 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மஹா கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது. இந்த கும்பாபிஷேக விழாவில் பல்லாயிரக்கணக்கான சென்னை, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
Similar News
News April 19, 2025
சிங்கம் மற்றும் புலியை தத்தெடுத்த சிவகார்த்திகேயன்

நடிகர் சிவகார்த்திகேயன் வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள ஒரு சிங்கம் மற்றும் ஒரு புலியை மூன்று மாதங்களுக்கு தத்தெடுத்துள்ளார். “ஷேர்யார்” என்ற சிங்கத்தையும் “யுகா” என்ற புலியையும் அவர் தத்தெடுத்து, அவற்றின் பராமரிப்பு செலவை ஏற்றுக்கொண்டுள்ளார். இதன் மூலம் உயிரியல் பூங்காவின் பராமரிப்பு செயல்பாடுகளுக்கு அவரது பங்கு மிக்க மகிழ்ச்சியளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
News April 19, 2025
பெண்கள் உதவி மையத்தில் வேலை

தாம்பரம் பெண்கள் உதவி மையத்தில், தொகுப்பூதிய மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.10,000 – ரூ.12,000 வழங்கப்படும். பாதுகாப்பாளர் பணிக்கு பள்ளிப்படிப்பு முடித்த ஆண், பெண்ணும், பன்முக உதவியாளருக்கு சமையல் தெரிந்தவர்களும் விண்ணப்பிக்கலாம். இந்த லிங்கில் விண்ணப்பத்தை பெற்றுக் கொண்டு, வரும் 30ஆம் தேதிக்குள் சென்னை கலெக்டர் ஆபிசுக்கு நேரடியாகவோ, இ-மெயில் மூலமாகவோ அனுப்பலாம்.
News April 19, 2025
AC ரயிலின் கட்டண விவரம்

சென்னையில் இன்று தொடங்கிய AC வசதியுடன் கூடிய புறநகர் ரயிலில் பயணிக்க குறைந்தபட்சமாக ரூ.35, அதிகபட்சமாக ரூ.105 வசூலிக்கப்படுகிறது. சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு வரை ரூ.105 டிக்கெட் கட்டணம் ஆகும். சென்னை கடற்கரையில் இருந்து தம்பரத்திற்கு ரூ.85 டிக்கெட் கட்டணம் ஆகும். தாம்பரம் – எழும்பூருக்கு ரூ.60, செங்கல்பட்டு – எழும்பூருக்கு ரூ.85 டிக்கெட் கட்டணம் ஆகும். ஷேர் செய்யுங்கள்.