News March 26, 2025
4 வயது சிறுவனை கொன்ற 12 வயது சிறுமி

போபாலில் 12 வயது சிறுமியுடன் விளையாடிய 4 வயது சிறுவன் மாயமாகி இருக்கிறான். அதன்பின், சிறுமி முன்னுக்கு பின் முரணாக பல பதில்களை கூறியிருக்கிறார். இதனையடுத்து, சிறுமியை விசாரித்த பெண் போலீஸ், சாமி வந்தது போல நாடகமாடியிருக்கிறார். இதனால் அச்சமடைந்த சிறுமி, சிறுவனை கொலை செய்து புதைத்ததை ஒப்புக் கொண்டார். 50 போலீசார் தேடியும் கிடைக்காத சிறுவன், இறுதியில் நாடகத்தின் மூலம் பிணமாக மீட்கப்பட்டான்.
Similar News
News December 7, 2025
பயனர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த ஏர்டெல்

ஏர்டெல்லின் குறைந்த விலை ₹181 Data பிளான் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக ₹195 பிளான்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ₹195-ல் 12GB Data + JioHotstar உள்பட 20 OTT-க்கான 1 மாத Subscription கிடைக்கும். முன்னதாக, ₹181 ரீசார்ஜ் பிளானில் 30 நாளுக்கான 15GB Data வழங்கியதோடு 20 OTT Subscription-ஐ ஏர்டெல் இலவசமாக வழங்கியது குறிப்பிடத்தக்கது.
News December 7, 2025
வங்கிகளில் ₹78,000 கோடி உரிமை கோரப்படவில்லை: PM

நாட்டின் வங்கிகளில் உரிமை கோரப்படாமல் ₹78,000 கோடி உள்ளதாக PM மோடி தெரிவித்துள்ளார். இது ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் பணம் என்று குறிப்பிட்ட அவர், அப்பணத்தை உரியவர்களிடம் ஒப்படைக்க அரசு முயற்சி எடுத்து வருவதாக கூறியுள்ளார். இதற்காக 500-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அவர் பேசியுள்ளார்.
News December 7, 2025
அத்திவரதரை போல 3 நாள்களே காட்சி தரும் சுயம்புலிங்கம்!

சென்னை திருவொற்றியூர் தியாகராஜசாமி- வடிவுடையம்மன் கோயிலில், ஆண்டுதோறும் ஒருமுறை மட்டும் ஆதிபுரீஸ்வரர் நாககவசம் திறப்பு விழா நடைபெறுகிறது. கார்த்திகை பெளர்ணமியை முன்னிட்டு, 3 நாள்கள் இயற்கையாக உருவான சிவலிங்கமான ஆதிபுரீஸ்வரர், எந்த அலங்காரமும் இன்றி காட்சியளிக்கிறார். இதுவே இக்கோவிலின் தனிசிறப்பு என பக்தர்கள் நம்புகின்றனர். கடந்த 4-ம் தேதி முதல் ஆதிபுரீஸ்வரரை பக்தர்கள் தரிசித்து வருகின்றனர்.


