News October 27, 2024
தமிழக மீனவர்கள் 12 பேர் சிறைபிடிப்பு

தமிழக மீனவர்கள் 12 பேரை எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ளது. நெடுந்தீவு அருகே கடலில் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படை அவர்களை படகுடன் சிறைபிடித்தது. இலங்கை கடற்படையின் செயலால் தமிழக மீனவர்கள் கவலை அடைந்துள்ள நிலையில், மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற கோரிக்கை வலுத்துள்ளது.
Similar News
News July 9, 2025
PM KISAN: வங்கி கணக்கில் ₹2000 எப்போது?

நாடு முழுவதுமுள்ள விவசாயிகளின் ஒரே எதிர்பார்ப்பு PM KISAN திட்ட தவணைத் தொகை எப்போது கிடைக்கும் என்பதுதான். ஜூனில் பணம் வரவு வைக்கப்படும் என தகவல் வெளியான நிலையில், ஏமாற்றமே மிஞ்சியது. இந்நிலையில், ஜூலை 18 அன்று பிஹாரின் மோட்டிஹரி பகுதியில் PM மோடி பங்கேற்கும் அரசு நிகழ்ச்சியில், பண வரவு குறித்த அறிவிப்பு வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
News July 9, 2025
அடுத்த தலைமுறைக்கான திட்டங்கள்: உதயநிதி பெருமிதம்

அடுத்த தலைமுறையை கருத்தில் கொண்டு CM திட்டங்களை கொண்டு வருவதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கரூரில் ₹40 கோடியில் புதிய பேருந்து நிலையத்தை திறந்து வைத்த பின் இவ்வாறு கூறியுள்ளார். அதேபோல் அதிமுக ஆட்சியில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் செயலிழந்து காணப்பட்டதாக குற்றம்சாட்டிய அவர் திமுக ஆட்சியில் அவை மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
News July 9, 2025
உங்களுக்கு 30 வயது ஆகிவிட்டதா? இதை கவனிங்க

30 வயது என்பது நடுத்தர வயதை நாம் நெருங்கப் போகிறோம் என்பதை உணர்த்தும் மைல்கல். இந்த வயதில் ஆரோக்கியம் பராமரிக்க: ➤கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிர்க்கவும். ➤வேலைபளு காரணமாக உணவை தவிர்க்க கூடாது. ➤தினமும் 7-8 மணி நேரம் தூக்கம் அவசியம் ➤தினமும் 30 நிமிடம் உடற்பயிற்சி ➤மது, புகைப்பிடித்தல் முற்றிலும் தவிர்க்க வேண்டும். ➤குடும்பத்தினருடன் மனம்விட்டுப் பேச வேண்டும். இது புத்துணர்ச்சியை கொடுக்கும்.