News May 10, 2024
12 நக்சல்கள் சுட்டுக் கொலை

சத்தீஸ்கரில் 12 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பிஜப்பூர் மாவட்டம் கங்கலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த நக்சலைட்டுகளுக்கும், அவர்களுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை மூண்டது. இதில், இதுவரை 12 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், சண்டை தொடர்வதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
Similar News
News November 18, 2025
ரஜினிக்கு பாராட்டு விழா நடத்தும் மத்திய அரசு

கோவாவில் வரும் 20 முதல் 28-ம் தேதி வரை, சர்வதேச திரைப்பட விழா நடைபெற உள்ளது. அதில், திரைத்துறையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினிகாந்த், தெலுங்கு நடிகர் பாலய்யாவை கவுரவிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த பாராட்டுவிழா, வரும் 28-ம் தேதி நடைபெற உள்ளதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். முன்னதாக, பாராட்டு விழா நடத்த சிலர் முன் வந்த போது, ரஜினி அதை தவிர்த்துவிட்டார்.
News November 18, 2025
ரஜினிக்கு பாராட்டு விழா நடத்தும் மத்திய அரசு

கோவாவில் வரும் 20 முதல் 28-ம் தேதி வரை, சர்வதேச திரைப்பட விழா நடைபெற உள்ளது. அதில், திரைத்துறையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினிகாந்த், தெலுங்கு நடிகர் பாலய்யாவை கவுரவிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த பாராட்டுவிழா, வரும் 28-ம் தேதி நடைபெற உள்ளதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். முன்னதாக, பாராட்டு விழா நடத்த சிலர் முன் வந்த போது, ரஜினி அதை தவிர்த்துவிட்டார்.
News November 18, 2025
நானும் ரவுடிதான் என்கிறார் விஜய்: சேகர் பாபு

விஜய் SIR பற்றி பேசுவது கடைசியாக நானும் ரவுடிதான் என சொல்வது போல இருக்கிறது என சேகர் பாபு விமர்சித்துள்ளார். முன்னதாக SIR-க்கு எதிராக திமுக நடத்திய அனைத்து கட்சி கூட்டத்தை விஜய் புறக்கணித்தார். அரசியல் நோக்கத்தோடு திமுக அந்த கூட்டத்தை நடத்துவதாக அறிக்கையில் விமர்சித்திருந்தார். இதனால் களத்தில் நின்று கருத்து சொல்லவில்லை, விஜய் பாஜகவின் பி டீம் என விமர்சனங்கள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.


