News March 5, 2025
தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் 12 பேர் பலி

பாகிஸ்தானில் ராணுவ வளாகத்தில் நிகழ்ந்த தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 12ஆக உயர்ந்துள்ளது. கைபர் பக்துன்குவா மாகாணத்தில் பன்னு பகுதியில் நேற்று மாலை நிகழ்த்தப்பட்ட இந்த கொடூரத் தாக்குதலில் 9 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 12ஆக உயர்ந்துள்ளது. மேலும், 3 குழந்தைகள், 2 பெண்கள் உள்ளிட்ட 20 பேர் படுகாயங்களுடன் ஹாஸ்பிடலில் இருக்கும் காட்சிகள் காண்போரை கண்கலங்க வைக்கிறது.
Similar News
News November 21, 2025
7 தங்க பதக்கத்தை வென்ற இந்திய சிங்கப் பெண்கள்

உலகக் கோப்பை குத்துச்சண்டையில் நேற்று ஒரேநாளில் 7 இந்திய வீராங்கனைகள் தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளனர். 48 கிலோ(KG) பிரிவில் மீனாட்சி, 54KG-ல் பிரீத்தி, 70KG-ல் பிரிவில் அருந்ததி சவுத்ரி, 80KG-ல் நுபுர், 51KG-ல் ஜதுமணி, 65KG-ல் அபினாஷ் ஜம்வால். 80KG-ல் அங்குஷ் பன்ஹால் ஆகியோர் தங்கத்தை முத்தமிட்டனர். மற்றொரு இந்தியா வீராங்கனை ஹிதேஷ், கஜகஸ்தான் வீராங்கனையிடம் தோல்வியடைந்து வெள்ளி வென்றார்.
News November 21, 2025
மெட்ரோ திட்டத்தில் பாஜகவுக்கு உள்நோக்கம்: செந்தில் பாலாஜி

மெட்ரோ ரயில் திட்டங்களை மத்திய அரசு நிராகரித்ததாக கூறி கோவையில் போராட்டத்தில் ஈடுபட்ட செந்தில் பாலாஜி, மத்திய அரசு அரசியல் உள்நோக்கத்துடன் செயல்படுவதாக குற்றம்சாட்டினார். திட்ட அறிக்கையில் சந்தேகம் இருந்தால், அதைத் தெளிவுபடுத்த 15 மாதங்கள் அவகாசம் எடுக்க வேண்டிய அவசியமில்லை எனவும் தெரிவித்தார். மேலும் TN-க்கு BJP அரசு இதுவரை ஏதாவது சிறப்புத் திட்டம் கொண்டு வந்துள்ளதா? என்றும் கேள்வி எழுப்பினார்.
News November 21, 2025
பள்ளி மாணவர்களுக்கு இலவச கண் கண்ணாடி: அமைச்சர்

இந்த ஆண்டு இறுதிக்குள் 3 லட்சம் பள்ளி குழந்தைகளுக்கு இலவச கண் கண்ணாடி வழங்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு இதுவரை 27,90,093 பள்ளிக்குழந்தைகளுக்கு நடத்தப்பட்ட கண் பரிசோதனையில் 2,00,214 பேருக்கு பார்வை குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். பள்ளி குழுந்தைகள் ஸ்கிரீன் டைம் அதிகரித்ததே கண் பார்வை பாதிப்புக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.


