News February 24, 2025

12 இந்தியர்கள் நாடு கடத்தல்

image

அமெரிக்காவில் சட்டவிரோதமாக நுழைய முயன்ற 12 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டனர். ஆசிய நாடுகளைச் சேர்ந்த மொத்தம் 299 பேரை பனாமா நாட்டு தடுப்பு முகாம்களில் வைத்து அமெரிக்கா நாடு கடத்தி வருகிறது. அவர்களில் முதல் பேட்ச் தற்போது டெல்லி வந்தடைந்துள்ளனர். இவர்களில் 4 பேர் பஞ்சாபையும், தலா 3 பேர் உ.பி மற்றும் ஹரியானாவைச் சேர்ந்தவர்கள். இதுவரை 332 இந்தியர்கள் இப்படி நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

Similar News

News February 24, 2025

கோலியை புகழ்ந்து தள்ளிய PAK கேப்டன்

image

உலகமே கோலி ஃபார்மில் இல்லை எனக் கூறும்போது தான், அவர் சதம் அடித்துள்ளதாக PAK கேப்டன் முகமது ரிஸ்வான் தெரிவித்துள்ளார். கோலியின் கடின உழைப்பும், ஃபிட்னஸும் கண்டிப்பாகப் பாராட்டப்பட வேண்டிய ஒன்று எனவும், அவரை அவுட்டாக்க கடினமாக முயற்சித்தும் அது பலனளிக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், பேட்டிங், ஃபீல்டிங், பவுலிங் என அனைத்திலும் சொதப்பியதே தங்களின் தோல்விக்கு காரணம் என தெரிவித்துள்ளார்.

News February 24, 2025

பரிசு தருவதாக கூறி 10ஆம் வகுப்பு மாணவி வன்கொடுமை

image

கரூர் கிருஷ்ணாபுரம் அருகே 10ஆம் வகுப்பு மாணவிக்கு பரிசு தருவதாக அழைத்து, 12ஆம் வகுப்பு மாணவன் தனது நண்பர்களுடன் சேர்ந்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த அவலம் அரங்கேறியுள்ளது. பெற்றோரிடம் தெரிவிப்பதாக கூறியதால் மாணவியின் கழுத்தை மாணவர்கள் அறுத்த கொடூரமும் நடந்துள்ளது. தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் ஹாஸ்பிடலில் உள்ள சிறுமி அளித்த தகவலின்படி ஒரு மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

News February 24, 2025

இபிஎஸ் நடத்திய விழா: புறக்கணித்த செங்கோட்டையன்

image

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா இபிஎஸ் தலைமையில் நடந்தது. இதில், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்காதது அதிமுகவில் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ராயப்பேட்டைக்கு பதிலாக ஈரோட்டில் நடந்த விழாவில் அவர் பங்கேற்றார். அதே நேரம் விழாவுக்காக ஈரோட்டில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டரில் இபிஎஸ் பெயர் இடம்பெறாததும் பேசுபொருளாகியுள்ளது.

error: Content is protected !!