News September 24, 2024

12 நிமிடங்களில் 23 லட்சத்தை கொள்ளை அடித்த மர்ம நபர்கள்

image

கிருஷ்ணகிரி எஸ் பி ஐ வங்கி ஏடிஎம் கொள்ளை தொடர்பாக ஏ.டி.எஸ்.பி., சங்கர், டி.எஸ்.பி., முரளி மற்றும் போலீசார் கொண்ட 3 தனிப்படைகள் அமைத்து கொள்ளையர்களை தேடி வரும் நிலையில் கொள்ளையர்கள் சம்பவ இடத்திற்கு காரில் வந்து 12 நிமிடங்களில் கேஸ் வெல்டிங் வைத்து பணத்தை கொள்ளை அடித்து சென்றுள்ளனர் என்றும், 23 லட்சம் ரூபாய் வரை கொள்ளை போய் இருப்பதாகவும் மகாராஜகடை போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Similar News

News August 26, 2025

இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் நிலவரம்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று (ஆக. 26) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அதிகாரிகளை அவசர காலத்திற்கு அழைக்கலாம் என்று தெரிவித்துள்ளனர். மேலும் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க

News August 26, 2025

கிருஷ்ணகிரி: BCA, B.Sc படித்தவர்களுக்கு அரசு வேலை!

image

சென்னை உயர்நீதிமன்றத்தில் தொழில்நுட்ப பிரிவில் உள்ள 41 உதவி புரோகிராமர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு B.Sc, BCA, MCA, M.Sc படித்த 18 வயது முதல் 37 வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.35,900-1,31,500 வரை வழங்கப்படும். இப்பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மற்றும் வைவா நடத்தப்படும். விருப்பமுள்ளவர்<> இந்த லிங்கில் <<>>வரும் செ.9க்குள் விண்ணப்பிக்கலாம். நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க

News August 26, 2025

கிருஷ்ணகிரி: பேருந்தில் பயணிப்பவர்கள் கவனத்திற்கு…

image

கிருஷ்ணகிரி மக்களே, அரசு பேருந்தில் நடத்துனர் உங்களை மரியாதை குறைவாக நடத்தினாலோ, சரியான சில்லறை வழங்கவில்லை என்றாலோ, உங்கள் பகுதியில் பேருந்து நிற்காமல் சென்றாலோ, பேருந்து கால தாமதமாக வருகிறது என்றாலோ (அ) லக்கேஜை பேருந்தில் மறந்து விட்டாலோ இனி கவலை வேண்டாம். இந்த எண்ணில் (1800 599 1500) உங்கள் குறைகளை புகார் செய்யலாம். உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். இதை மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!