News February 26, 2025
மத்திய அரசில் 1,161 Vacancy: ₹69,100 வரை சம்பளம்!!

மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையில் (CISF) 1,161 காலிப்பணியிடங்கள் உள்ளன. கான்ஸ்டபிள் வேலைக்கு ITI சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். உடற்தகுதி தேர்வு, திறன் தேர்வு, மருத்துவ பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் தேர்ச்சி நடைபெறும். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ₹69,100 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு ஏப்ரல் 3 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். முழு விவரங்களை அறிய <
Similar News
News February 27, 2025
தவெக என்ன செய்யும்?

விஜய் தலைமையிலான தவெக தொடங்கப்பட்டு ஓராண்டு ஆகிறது. இந்த ஓராண்டு காலத்தில், தன்னுடைய கொள்கைகள் தெளிவாக முன் வைத்திருக்கிற விஜய், கொள்கைத் தலைவர்களையும் பெயரிட்டிருக்கிறார். 2026ஆம் ஆண்டு தேர்தலை சந்திக்க பூத் வாரியாக நிர்வாகிகளை நியமித்து வருகிறார். இந்நிலையில், ஓராண்டு கால தவெகவின் செயல்பாடுகள் எப்படி இருக்கு? தேர்தலில் இக்கட்சியால் என்ன தாக்கம் இருக்கும்? கமெண்ட்டில் சொல்லுங்க.
News February 27, 2025
விஜய்க்கு இன்னும் ஏன் Y பிரிவு பாதுகாப்பு வழங்கவில்லை?

விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு அறிவித்திருந்தாலும், தற்போது வரை பாதுகாப்பு வழங்கப்படவில்லை. Z+, Z, Y+, Y, X ஆகிய பிரிவு பாதுகாப்பு அறிவித்த பின்பு, மத்திய அரசின் Security Review Committee-இன் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும். அதாவது, பாதுகாப்பு குறித்து அந்தந்த மாநில டிஜிபி உள்ளிட்ட அதிகாரிகளோடு நடைபெற வேண்டிய ஆலோசனைக் கூட்டம் இன்னும் நடக்கவில்லை. இதனால், அவருக்கு இன்னும் பாதுகாப்பு அளிக்கப்படவில்லை.
News February 27, 2025
CT தொடரில் இருந்து வெளியேறியது இங்கிலாந்து

நடப்பு சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இருந்து மூன்றாவது அணியாக இங்கிலாந்து வெளியேறியுள்ளது. ஏற்கெனவே குரூப் ஏ-வில் இருந்து வங்கதேசமும் பாகிஸ்தானும் வெளியேறியுள்ளன. இந்நிலையில், ஆஸ்திரேலியா & ஆப்கானிஸ்தானிடம் தோல்வியடைந்த இங்கிலாந்து, லீக் போட்டிகளிலேயே வெளியேறியுள்ளது. இதுவரை, இந்தியா & நியூசிலாந்து அணிகள் மட்டுமே அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.