News February 26, 2025
மத்திய அரசில் 1,161 Vacancy: ₹69,100 வரை சம்பளம்!!

மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையில் (CISF) 1,161 காலிப்பணியிடங்கள் உள்ளன. கான்ஸ்டபிள் வேலைக்கு ITI சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். உடற்தகுதி தேர்வு, திறன் தேர்வு, மருத்துவ பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் தேர்ச்சி நடைபெறும். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ₹69,100 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு ஏப்ரல் 3 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். முழு விவரங்களை அறிய <
Similar News
News February 26, 2025
8 மாவட்டங்களில் நாளை PF சிறப்பு முகாம்

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையம், 8 மாவட்டங்களில் நாளை சிறப்பு முகாம்களுக்கு ஏற்பாடு செய்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், தி.மலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் புதுச்சேரி, காரைக்காலிலும் நாளை இந்த சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன. இந்த முகாம் நடைபெறும் இடங்களுக்கு சென்று உரிய விண்ணப்பத்தை பூர்த்தி செய்து PF பயனாளர்கள் பிரச்னைக்குத் தீர்வு காண முடியும்.
News February 26, 2025
தப்பிச்சோம்டா சாமி…

பூமியின் மீது ’சிட்டி கில்லர்’ விண்கல் மோதுவதற்கான வாய்ப்புகள் இல்லை என்று ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவனம் (ESA) தெரிவித்துள்ளது. இந்த விண்கல் 2032ஆம் ஆண்டு பூமியில் மோதுவதற்கு 3% மட்டுமே வாய்ப்புகள் இருப்பதாக நாசா கூறியிருந்தது. இந்நிலையில், தொடர் ஆய்வுகளுக்குப்பின் அது மோதுவதற்கான சாத்தியக்கூறு 0.001%ஆக குறைந்துள்ளது. முன்னதாக, அந்த விண்கல் சென்னையில் மோத வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டிருந்தது.
News February 26, 2025
சீமானுக்கு எதிராக புதிய ஆதாரங்களை வழங்கிய நடிகை

சீமான் மீது பாலியல் வன்கொடுமை புகாரளித்த நடிகை விஜயலட்சுமியிடம் 5 மணி நேரத்துக்கும் மேலாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அப்போது, திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றி பணம், நகைகளை சீமான் வாங்கியது பற்றிய முக்கிய ஆதாரங்களை வளசரவாக்கம் போலீசாரிடம் அவர் சமர்ப்பித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த விவகாரம் சீமானுக்கு பெரும் சிக்கலாக மாறக்கூடும் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.