News March 21, 2025

80 நாள்களில் 113 நக்சல்கள் சுட்டுக்கொலை!

image

சத்தீஸ்கரில் பிஜப்பூர், கான்கெர் மாவட்டங்களில் நடந்த இரு வேறு என்கவுன்ட்டர்களில் 30க்கும் மேற்பட்ட நக்சல்கள் கொல்லப்பட்டிருந்தனர். இதனுடன் சேர்த்து கடந்த 80 நாளில் மட்டும் 113 நக்சல்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் பிஜப்பூரில் மட்டும் 91 பேர் கொல்லப்பட்டுள்ளனர். நக்சல் இல்லாத நாட்டை உருவாக்கும் முயற்சியில் நமது படை வீரர்கள் மகத்தான வெற்றியை பெற்று வருகின்றனர் என அமித் ஷா பாராட்டியுள்ளார்.

Similar News

News March 28, 2025

வசூலில் புதிய உச்சம் தொட்ட L2: எம்புரான்!

image

மோகன்லால் நடிப்பில் பிருத்விராஜ் இயக்கிய, ‘L 2: எம்புரான்’, நாடு முழுவதும் முதல் நாளில் ₹ 21 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இதன் மூலம், முதல் நாளில் அதிக வசூல் செய்த மலையாள படம் என்ற சாதனையை எம்புரான் படைத்துள்ளது. முன்னதாக, இச்சாதனையை பிருத்விராஜின் ‘ஆடுஜீவிதம்’ (₹ 8.95cr) பெற்றிருந்தது. நீங்க படம் பாத்துட்டீங்களா.. படம் எப்படி இருக்கு?

News March 28, 2025

10 இடங்களில் சதமடித்த வெயில்.. இன்றும் ஜாக்கிரதை!

image

தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் மீண்டும் அதிகரித்துள்ளது. அடுத்த 10 நாள்களுக்கு இதே நிலைதான் நீடிக்கும் என வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். நேற்று சென்னை உட்பட 10 இடங்களில் வெயில் சதமடித்தது. அதிகபட்சமாக வேலூரில் 104 டிகிரி பதிவானது. ஈரோடு, கரூர், சேலம், திருப்பத்தூர், திருச்சி, திருத்தணி ஆகிய இடங்களிலும் 100 டிகிரிக்கு மேல் பதிவாகியுள்ளது. பகலில் தேவையின்றி வெளியே வரவேண்டாம் மக்களே..!

News March 28, 2025

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது

image

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது. இன்று (மார்ச் 28) முதல் அடுத்த மாதம் (ஏப்.15) வரை நடைபெறவிருக்கும் இத்தேர்வை 4,46,411 பள்ளி மாணவர்கள், 4,40,465 மாணவிகள், 25,888 தனித்தேர்வர்கள் மற்றும் சிறைவாசிகள் 272 பேர் என மொத்தம் 9,13,036 பேர் எழுதவுள்ளனர். இதற்காக மாநிலம் முழுவதும் 4,113 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. காலை 10 முதல் பிற்பகல் 1.15 வரை தேர்வு நடைபெறவுள்ளது. ALL THE BEST

error: Content is protected !!