News November 28, 2024

111 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கிய தூத்துக்குடி SP

image

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடைபெற்ற 2ஆம் நிலை காவலர்களுக்கான தேர்வில், தூத்துக்குடி மாவட்டத்தில் 150 பேர் தேர்வு பெற்றனர். இதில் 39 பேருக்கு சென்னையில் தமிழக முதலமைச்சர் பணி நியமன ஆணை வழங்கினார். மீதமுள்ள 111 பேருக்கு நேற்று(நவ.,27) தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பணி நியமன ஆணைகளை எஸ்பி அலுவலகத்தில் வைத்து வழங்கினார்

Similar News

News December 16, 2025

பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு பாஜக கண்டனம்

image

ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஒரு கல்குவாரியில் வேலை தேடி வந்த அசாம் மாநில பெண் கூட்டு பாலியல் செய்யப்பட்ட சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலமாக தமிழ்நாடு ஆகிவிட்டது என்பதை மீண்டும் ஒருமுறை இச்சம்பவம் நிரூபித்துள்ளது. காட்டுமிராண்டித்தனமான இச்செயலுக்கு வெட்கி தலை குனிய வேண்டும் என தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக தலைவர் சித்ராங்கன் தெரிவித்துள்ளார்.

News December 16, 2025

தூத்துக்குடி: FREE கேஸ் சிலிண்டர் வேண்டுமா? APPLY NOW

image

தூத்துக்குடி மக்களே, உஜ்வாலா யோஜனா என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கபட்டுகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்த படிவத்தை இந்தியன், எச்.பி. பாரத் ஆகிய ஏதேனும் ஒரு கேஸ் ஏஜென்சியில் கொடுத்தால் இலவச கேஸ் அடுப்பு மற்றும் சிலிண்டர் வழங்கப்படும். மறக்காம SHARE பண்ணுங்க

News December 16, 2025

தூத்துக்குடியில் நாளை குடிநீர் விநியோகம் நிறுத்தம்

image

தூத்துக்குடி மாநகராட்சியில் டிசம்பர் 17 காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை குடிநீர் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. கொம்புகாரநத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் வல்லநாடு, கலியாவூர், கீழ வல்லநாடு குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு மின்தடை ஏற்படும். இதனால் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என மாநகராட்சி ஆணையர் சி.ப்ரியங்கா கூறியுள்ளார்.

error: Content is protected !!