News March 5, 2025

+1 தேர்வில் 11,070 பேர் ஆப்சென்ட்

image

+1 பொதுத் தேர்வில் இன்று 11,070 பேர் தேர்வெழுதாமல் ஆப்சென்ட் ஆகியுள்ளனர். தமிழகம் முழுவதும் +1 பொதுத் தேர்வு இன்று தொடங்கியது. மாணவ, மாணவியர் சிரமமின்றி தேர்வெழுத அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. மாநிலம் முழுவதும் மொத்தமாக 8,23,261 பேர் தேர்வெழுதவிருந்தனர். இந்நிலையில் மொழிப் பாடத் தேர்வு எழுதாமல் மொத்தமாக 11,070 பேர் ஆப்சென்ட் ஆகியுள்ளனர். காரணம் குறித்து ஆராய்ந்து வருகின்றனர்.

Similar News

News December 8, 2025

பள்ளிகள் 12 நாள்கள் விடுமுறை.. அரசு அறிவிப்பு

image

அரையாண்டு தேர்வுகள் நாளை மறுநாள் முதல் டிச.23 வரை நடைபெறவுள்ளன. 6-ம் வகுப்புக்கு காலை 10- 12 மணி, 7-ம் வகுப்புக்கு பகல் 2- 4 மணி, 8-ம் வகுப்புக்கு காலை 10- 12.30 மணி, 9-ம் வகுப்புக்கு பகல் 2- 4.30 மணி, 10-ம் வகுப்புக்கு காலை 9.45- பகல் 1 மணி, 11-ம் வகுப்புக்கு பகல் 1.45 – மாலை 5 மணி, 12-ம் வகுப்புக்கு காலை 9.45- பகல் 1 மணி வரை தேர்வுகள் நடைபெறும். டிச.24- ஜன.4 வரை 12 நாள்கள் விடுமுறையாகும்.

News December 8, 2025

நட்புன்னா என்னான்னு தெரியுமா?

image

8 வயதில், நமது நண்பர்களுக்கு என்ன Gift கொடுத்திருப்போம்? மிஞ்சிப்போனால் பேனா, பென்சில், ரப்பர். ஆனால் சீனாவில் நட்பை வளர்க்க, தாயின் தங்க செயினையே வெட்டி, மாணவர்களுக்கு பரிசாக வழங்கியுள்ளான் 8 வயது சிறுவன். வேடிக்கை என்னவென்றால் ஒரு மாதம் கழித்தே பெற்றோருக்கு இது தெரிந்துள்ளது. பல பேரிடம் கொடுத்ததால், தங்க துண்டுகளை மீட்பது பெரும்பாடாக உள்ளதாக கூறப்படுகிறது. சிறுவயதில் நீங்கள் கொடுத்த கிப்ட் எது?

News December 8, 2025

விஜயகாந்தை விட விஜய் அதிக தாக்கத்தை ஏற்படுத்துவார்: TTV

image

விஜய் தலைமையில் வலுவான கூட்டணி அமைந்தால், அது ஆளும் கட்சிக்கு சரியான போட்டியாக இருக்கும் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். விஜய்காந்த் வருகையால் 2006-ல் திமுக மைனாரிட்டி ஆட்சி அமைந்தது, அதைவிட பெரிய தாக்கத்தை விஜய் ஏற்படுத்துவார் எனவும் கணித்துள்ளார். இப்படி சொல்வதால் தவெகவுடன், அமமுக கூட்டணி அமைக்கும் என்பது உறுதி இல்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார்.

error: Content is protected !!