News August 6, 2025
வெள்ளத்தில் சிக்கி 11 வீரர்கள் மாயம்

உத்தரகாண்ட் மேகவெடிப்பால் ஏற்பட்ட பயங்கர வெள்ளத்தில், அங்கிருந்த ராணுவ முகாமும் அடித்து செல்லப்பட்டது. இதில் மீட்புபணிகளுக்குச் சென்ற 11 ராணுவ வீரர்கள் மாயமானதாக அஞ்சப்படுகிறது. அம்மாநிலத்தில் இன்று மதியம் 1:45 மணிக்கு மேகவெடிப்பு பெருவெள்ளம் ஏற்பட்டது. வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இதுவரை 130 பேரை மீட்டுள்ளதாக அம்மாநில CM புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார்.
Similar News
News August 6, 2025
‘மாபெரும் தமிழ்க் கனவு’ மீண்டும் தொடக்கம்

கல்லூரி மாணவர்களிடையே தமிழர் மரபை பரப்பும் ‘மாபெரும் தமிழ்க் கனவு’ பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சிகள் ஓராண்டு இடைவெளிக்கு பின் இன்று மீண்டும் தொடங்குகிறது. கோவை, திருப்பூர், சென்னை, செங்கல்பட்டு, தஞ்சாவூர், திருவாரூர், ஈரோடு உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்றும், நாளையும் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. 50-க்கும் மேற்பட்ட பல்துறை ஆளுமைகள், 200 கல்லூரிகள், 2 லட்சம் மாணவர்கள் இதில் பங்கேற்க உள்ளனர்.
News August 6, 2025
9 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்

நீலகிரி, கோவை மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் IMD ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது. அதேபோல் தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் மஞ்சள் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 30-40 கி.மீ., வேகத்தில் வீசக்கூடும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.
News August 6, 2025
மீண்டும் CAB தலைவராகும் கங்குலி?

முன்னாள் BCCI தலைவர் சவுரவ் கங்குலி, மீண்டும் வங்காள கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக (CAB) உள்ளார். வரும் செப்டம்பர் 20ம் தேதி நடைபெற உள்ள CAB ஆண்டு பொதுக்கூட்ட நிகழ்ச்சிக்கு முன்னதாக, தலைவர் பதவிக்கு மனுத்தாக்கல் செய்ய உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ஆனால், அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார் என்றே கூறப்படுகிறது. கங்குலியின் சகோதரர் ஸ்நேகாஷிஷ் தான் தற்போது CAB தலைவராக இருக்கிறார்.