News March 27, 2025
ராமேஸ்வரம் மீனவர்கள் 11 பேர் நள்ளிரவில் கைது

ராமேஸ்வரம் மீனவர்கள் 11 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். நெடுந்தீவு அருகே நள்ளிரவில் மீன்பிடித்துக் கொண்டிருந்த அவர்களை எல்லைத்தாண்டி மீன் பிடித்ததாக கூறி கைது செய்த கடற்படையினர், ஒரு படகு மற்றும் வலைகள், மீன்களையும் பறிமுதல் செய்துள்ளனர். கடந்த சில மாதங்களாக தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்யும் நடவடிக்கை தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
Similar News
News November 16, 2025
ஆதி திராவிட நல பள்ளிகளில் தரமான கல்வி இல்லை: கவர்னர்

ஆதி திராவிட நல பள்ளிகளில் தரமான கல்வியை கற்றுக் கொடுப்பதில்லை என கவர்னர் ரவி குற்றஞ்சாட்டியுள்ளார். ஆதி திராவிட மாணவர்களுக்கான விடுதிகளும் தரமற்ற நிலையில் உள்ளதாகவும் அவர் விமர்சித்துள்ளார். மேலும், இந்திய அளவில் தமிழ்நாடு முன்னேறிய மாநிலமாக இருந்தாலும், இங்குள்ள பழங்குடி மக்களிடம், நான் ஒரு இந்தியன் என்பதற்கான ஒரு ஆவணம் கூட இல்லை; இது அவர்களை புறக்கணிக்கும் செயல் என்றும் தெரிவித்துள்ளார்.
News November 16, 2025
வாழ்க்கையை மாற்றும் பழக்கங்கள்

உங்களுக்குப் புதிய வாழ்க்கை தேவையில்லை. சில நல்ல பழக்கவழக்கங்கள் மட்டுமே தேவை. சிறிய, நிலையான செயல்கள் நம் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்குகின்றன. என்ன பழக்கத்தை வழக்கமாக மாற்ற வேண்டும் என்று, மேலே போட்டோக்களில் பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE பண்ணுங்க.
News November 16, 2025
தமிழகத்திலும் பிஹார் ஃபார்முலா

பிஹாரில் NDA வெற்றிக்கு சிராக் பஸ்வானின் LJP(RV) முக்கிய காரணமாக அமைந்தது. அதேபோல், தமிழகத்திலும் பட்டியலின கட்சிகளை ஒருங்கிணைத்து அவர்களின் வாக்குகளை பெற அமித்ஷா முடிவெடுத்துள்ளாராம். பிஹாரில் பட்டியலின கட்சிகள் முக்கிய அரசியல் சக்தியாக மாறியுள்ளன. ஆனால், TN-ல் பட்டியலின கட்சிகள் வளருவதை திமுக உள்ளிட்ட பெரிய கட்சிகள் விரும்புவதில்லை என்றுசொல்லி பிரசாரம் மேற்கொள்ள அமித்ஷா திட்டமிட்டுள்ளாராம்.


