News March 27, 2025
ராமேஸ்வரம் மீனவர்கள் 11 பேர் நள்ளிரவில் கைது

ராமேஸ்வரம் மீனவர்கள் 11 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். நெடுந்தீவு அருகே நள்ளிரவில் மீன்பிடித்துக் கொண்டிருந்த அவர்களை எல்லைத்தாண்டி மீன் பிடித்ததாக கூறி கைது செய்த கடற்படையினர், ஒரு படகு மற்றும் வலைகள், மீன்களையும் பறிமுதல் செய்துள்ளனர். கடந்த சில மாதங்களாக தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்யும் நடவடிக்கை தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
Similar News
News December 6, 2025
₹1,000 மகளிர் உரிமைத் தொகை… வந்தது HAPPY NEWS

தற்போது 1.15 கோடி குடும்ப தலைவிகளுக்கு மகளிர் உரிமைத்தொகை ₹1000 வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் விடுபட்டவர்கள் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்கள் மூலம் விண்ணப்பித்த நிலையில், அவர்களுக்கு டிச.12-ம் தேதி முதல் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டவுள்ளது. இந்நிலையில், டிச.12-ம் தேதி மகளிர் உரிமைத் தொகை வரவில்லை என்றால், உடனே கோட்டாட்சியரிடம் முறையிடலாம் என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
News December 6, 2025
விமான கட்டணத்திற்கு உச்ச வரம்பு நிர்ணயம்

இண்டிகோ விமான சேவை பாதிப்பால், பிற ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் டிக்கெட் கட்டணத்தை 10 மடங்கு வரை அதிகரித்தன. இதனால் பயணிகள் கடும் இன்னல்களுக்கு உள்ளாகினர். இந்நிலையில், குறிப்பிட்ட பயணங்களுக்கு தகுந்த டிக்கெட் விலையை மட்டுமே நிர்ணயிக்க வேண்டும் என, விமான கட்டண உச்ச வரம்பை மத்திய அரசு நிர்ணயித்துள்ளது. இது, விமான போக்குவரத்து சீராகும் வரை அமலில் இருக்கும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
News December 6, 2025
பிக்பாஸில் இருந்து இந்த வாரம் வெளியேறும் நபர்

பிக்பாஸ் தமிழில் ரம்யா, அரோரா, ஆதிரை, வியானாவை தவிர 11 பேர் இந்த வார நாமினேஷனில் இடம்பெற்றிருந்தனர். இந்நிலையில், unofficial Voting-ல் குறைவான வாக்குகளை பெற்றிருப்பதால் சுபிக்ஷா எலிமினேட் ஆவது உறுதி என கூறப்படுகிறது. ஒருவேளை டபுள் எவிக்ஷனாக இருந்தால் , கனி அல்லது அமித் இருவரில் ஒருவர் வெளியேறலாம் என கூறப்படுகிறது. வேறு யார் வெளியேற வேண்டும் என நீங்கள் நினைக்கிறீர்கள்?


