News March 27, 2025
ராமேஸ்வரம் மீனவர்கள் 11 பேர் நள்ளிரவில் கைது

ராமேஸ்வரம் மீனவர்கள் 11 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். நெடுந்தீவு அருகே நள்ளிரவில் மீன்பிடித்துக் கொண்டிருந்த அவர்களை எல்லைத்தாண்டி மீன் பிடித்ததாக கூறி கைது செய்த கடற்படையினர், ஒரு படகு மற்றும் வலைகள், மீன்களையும் பறிமுதல் செய்துள்ளனர். கடந்த சில மாதங்களாக தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்யும் நடவடிக்கை தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
Similar News
News November 24, 2025
ஒரே நேரத்தில் 2 புயல் சின்னங்கள்.. வந்தது அலர்ட்

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி நாளை மறுநாள் புயலாக மாற வாய்ப்புள்ளது. இந்நிலையில், குமரிக்கடல் மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சியின் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி (புயல் சின்னம்) உருவாக வாய்ப்புள்ளதாக IMD தெரிவித்துள்ளது. ஒரே நேரத்தில் 2 புயல் சின்னங்கள் வருவதால் தமிழகத்தில் கனமழை தொடரும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
News November 24, 2025
ராஜ்யசபா சீட்: பிரேமலதா கொடுத்த புது விளக்கம்

ராஜ்யசபா சீட் விவகாரத்தில் பிரேமலதா புது விளக்கத்தை கொடுத்துள்ளார். மக்களவைத் தேர்தலின்போது தேமுதிகவுக்கு ஒரு ராஜ்யசபா MP தருவதாக அதிமுகவினர் உத்தரவாதம் கொடுத்து இருந்தனர். ஆனால், அது 2025-ம் ஆண்டிலா 2026-ம் ஆண்டிலா என்று கூறவில்லை. நாங்கள் 2025 என நினைத்ததால் குழப்பம் ஏற்பட்டுவிட்டது. இதனால், எங்கள் கூட்டணி முறிந்து போனதாக சிலர் கூறுவதில் எந்த உண்மையும் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
News November 24, 2025
2.60 லட்சம் உக்ரைனியர்களின் கதி என்ன?

போர் காரணமாக 2.60 லட்சம் உக்ரைனியர்கள் அமெரிக்காவில் தஞ்சமடைந்துள்ளனர். அவர்களுக்கு பைடன் அரசு வழங்கிய சிறப்பு சலுகைகளை டிரம்ப் அரசு தாமதப்படுத்துகிறது. மேலும், டிரம்ப்பின் கடுமையான குடியேற்ற விதிகளால், 2026 மார்ச் 31-க்கு பிறகு அவர்களால் அங்கு வாழ முடியாத சூழல் உருவாகியுள்ளது. மேலும், போர் நிறுத்தம் இழுபறியாகி வருவதால், என்ன செய்வது என்றே தெரியாமல் அம்மக்கள் விழிபிதுங்கி நிற்கின்றனர்.


