News May 21, 2024

கனமழைக்கு 5 நாள்களில் 11 பேர் மரணம்

image

தமிழ்நாட்டில் தொடர் கனமழைக்கு கடந்த 5 நாள்களில் (மே 16 -20) 11 பேர் உயிரிழந்துள்ளனர் என பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவித்துள்ளது. கோவை, நெல்லை, நீலகிரி, குமரியில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள தயார் நிலையில் 10 குழுக்கள் உள்ளதாகவும், கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் சுற்றுலாத் தலங்களுக்கு பொதுமக்கள் செல்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

Similar News

News September 14, 2025

இறந்தவர் உயிருடன் வந்த அதிசயம்

image

நாக்பூரில் 36 ஆண்டுகளுக்கு முன் இறந்ததாக கருதப்பட்ட பெண், மீண்டும் உயிருடன் வந்துள்ளார். 1989-ல் அவர் வீட்டில் இருந்து மாயமாகியுள்ளார். அவர் இறந்துவிட்டதாக நினைத்து, ஆண்டுதோறும் குடும்பத்தினர் துக்கம் அனுசரித்து வந்துள்ளனர். இந்நிலையில், சற்று மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில், அவர் உயிருடன் இருப்பது தெரியவந்துள்ளது. மும்பை காப்பகத்தில் இருந்த அந்த பெண்ணை சமூக சேவகர்கள் குடும்பத்துடன் சேர்த்துள்ளனர்.

News September 14, 2025

மனைவியின் குடும்பப் பெயரை கணவர்கள் வைக்கலாம்

image

இந்தியாவில் திருமணமான பெண்கள் கணவர்களின் குடும்பப் பெயரை தன் பெயருக்கு பின் வைப்பது வழக்கம். இதனை சுற்றி பல விவாதங்கள் நடந்துவரும் நிலையில், தென்னாப்பிரிக்க நீதிமன்றம் ஒரு சட்டத்தை கொண்டுவந்துள்ளது. அதாவது, கணவர்கள் தங்கள் மனைவியின் குடும்பப் பெயரை தன் பெயரோடு இணைத்துக் கொள்வது சட்டப்படி செல்லும் என அறிவித்துள்ளது. ஆண்களே, இந்தியாவில் இந்த சட்டம் வந்தால் உங்கள் பெயரை மாற்றிக்கொள்வீர்களா?

News September 14, 2025

திராவிட மாடலை ஆராயும் வட இந்திய யூடியூபர்கள்: ஸ்டாலின்

image

2026 தேர்தலிலும் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று, மீண்டும் திராவிட மாடல் ஆட்சி அமையும் என்று CM ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரியில் நடைபெற்ற அரசு நிகழ்வில் பேசிய அவர், வட இந்திய யூடியூபர்கள் திராவிட மாடலை ஆராய்ந்து, அதனை அவர்களது மாநிலங்களில் செயல்படுத்த அறிவுறுத்துவதாகவும் சுட்டிக்காட்டினார். மேலும், தெற்காசியாவிலேயே முன்னணி மாநிலமாக தமிழகம் திகழும் என்றார்.

error: Content is protected !!