News December 26, 2024

11 மாதங்களில் 4,914 குழந்தைகள் பிறப்பு

image

கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள மகப்பேறு பிரிவில் 24 மணி நேரமும் பிரசவம் பார்க்கும் வசதிகள் உள்ளன. இந்த பிரிவில் 6 மருத்துவர்கள் பணியாற்றி வருகின்றனர். இங்கு, கடந்த 11 மாதங்களில் 2,496 ஆண் மற்றும் 2,418 பெண் குழந்தைகள் என மொத்தம் 4,914 குழந்தைகள் பிறந்துள்ளதாக மருத்துவ அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும், அதிகபட்சமாக அக்டோபர் மாதத்தில் 627 குழந்தைகள் பிறந்துள்ளதாக தெரிவித்தார்.

Similar News

News August 16, 2025

மங்கலம்பேட்டை: மது பாட்டில்கள் விற்றவர் கைது

image

மங்கலம்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருணகிரி தலைமையிலான போலீசார் நேற்று எம்.பட்டி கிராம பகுதியில் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்கு மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் (49) என்பவரை போலீசார் கையும் களவுமாக மடக்கி பிடித்து கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 40 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

News August 16, 2025

கடலூரில் நிலம் வாங்குவோர் கவனத்திற்கு

image

சொந்தமாக நிலம் வாங்கி வீடு கட்ட வேண்டும் என்பது இன்று பலரின் கனவாக உள்ளது. அவ்வாறு வாங்கும் நிலத்தின் மீது ஏதாவது நீதிமன்ற வழக்கு நிலுவையில் உள்ளதா என்பதை தெரிந்து கொள்வது பலருக்கும் சவாலாக உள்ளது. ஆனால், அந்த கவலை இனி வேண்டாம். நிலத்தின் மீது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் பற்றி அறிய <>clip.tn.gov.in <<>>என்ற இணையதளத்தில் நிலத்தின் சர்வே நம்பர் கொடுத்து உங்களுக்கு தேவையான தரவுகளை தெரிந்து கொள்ளலாம். SHARE பண்ணுங்க!

News August 16, 2025

இல.கணேசன் மறைவுக்கு வேல்முருகன் இரங்கல்

image

பண்ருட்டி எம்எல்ஏ-வும், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவருமான வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில். “இனிய நண்பரும், பழகுவதற்கு எளியவருமான இல.கணேசனின் மறைவு, அவர் சார்ந்த இயக்கத்திற்கு பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!