News August 14, 2024

11 பெண்களுக்கு ரூ.1.65 லட்சம் வழங்கல்

image

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை சார்பில் கிறிஸ்துவ மகளிர் உதவும் சங்கத்தின் கீழ் 11 நலிந்த பெண்களுக்கு தலா ரூ.15 ஆயிரம் வீதம் ரூ.1.65 லட்சத்திற்கான காசோலையை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதாஜீவன் இன்று (ஆக.14) மாலை வழங்கினார். நிகழ்வில் கலெக்டர் த.பிரபுசங்கர், வி.ஜி.ராஜேந்திரன் எம்.எல்.ஏ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Similar News

News December 3, 2025

திருவள்ளூர்: அடுத்தடுத்து 2 வீட்டில் கொள்ளை!

image

திருவாலங்காடு ஒன்றியம் அரிசந்திராபுரம் கிராமத்தில், வெளியூர் சென்றிருந்த 4 வீடுகளில் மர்ம நபர்கள் பூட்டை உடைத்துக் கொள்ளையடித்தனர். இதில் இரண்டரை பவுன் தங்க நகைகள், ரூ.10,000 மற்றும் வெள்ளிக் கொலுசு திருடப்பட்டன. மேலும், பூண்டி ஒன்றியத்தில் நெற்களம் அமைக்கும் பணியில் இருந்த 500 கிலோ இரும்பு கம்பிகளும் திருடு போயின. அடுத்தடுத்து நடந்த இந்தச் சம்பவங்கள் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

News December 3, 2025

திருவள்ளூரில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

image

‘டிட்வா’ புயல் காரணமாக இன்றும் (டிச.3) திருவள்ளூரில் பெய்து வரும் கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, திருவள்ளூரில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News December 3, 2025

திருவள்ளூர்: இரவு ரோந்து போலீஸ் எண்கள்

image

திருவள்ளூர் மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (03.12.2025) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம், காவல் நிலையம் வாரியாக மக்களின் எளிதான தொடர்பு வசதிக்காக வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கை உறுதிசெய்யும் நோக்கில் மேற்கொள்ளப்படும். மேலும், மக்கள் தங்களது பகுதிக்கான பொறுப்பு அதிகாரிகளை நேரடியாக தொடர்பு கொள்ளும் வசதியையும் வழங்குகிறது.

error: Content is protected !!